Quantcast
Channel: Kumurum MALAYAKAM
Viewing all articles
Browse latest Browse all 376

23,500 ரூபா சம்­பளம் என்­பதில் உண்­மை­யில்லை

$
0
0
பெருந்­தோட்டப் பாட­சா­லை­க­ளுக்­கென்று நிய­மனம் பெற்ற உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு கூடுதல் சம்­பளம் பெற்றுக் கொடு க்­கப்­ப­டு­மாயின் முதலில் மகிழ்ச்­சி­ய­டை­பவன் நானா­கவே இருப்பேன். ஆனால் உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு 23 ஆயி­ரத்து ஐநூறு ரூபா என்­ற­டிப்­ப­டையில் கூடுதல் சம்­ப­ள த்தைப் பெற்றுக் கொடுப்­ப­தாகக் கூறி வரு­வது உண்­மைக்குப் புறம்­பா­ன­தா­கு­ மென்று இ.தொ.கா வின் உப தலைவர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்தார்.
 
மடுல்­சீமை, ஊவா பர­ண­கமை, அப்­புத்­தளை போன்ற இடங்­களில் நடை­பெற்ற இ.தொ.கா. வின் தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் இ.தொ.கா. உப தலைவர் செந்தில் தொண்­டமான் கலந்து கொண்­பே­சு­கை யில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.தொடர்ந்து அவர் பேசு­கையில்;
 
‘‘கடந்த ஆட்­சியின் போது இ.தொ.கா. எடுத்துக் கொண்ட முயற்­சி­களின் பல­னாக மூவா­யிரம் உதவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்க அரசு இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தது. அதற்­க­மைய புதிய ஆட்­சயின் போது ஒரு தொகுதி உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டன. இந்­நி­ய­ம­ன ங்­களில் ஊவா மாகா­ணத்தில் 599 பேர் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்­க­ளுக்கு 23 ஆயி­ரத்து ஐநூறு ரூபா என்ற அடிப்­ப­டை யில் கூடுதல் சம்­பளம் பெற்றுத் தரு­வ­தாக மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரி­வித்­தி­ருந்தார்.அவ்­வு­தவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு கடந்த மாதம் வழங்­கப்­பட்ட சம்­ப­ளமும் வர்த்த மானி அறி­வித்­தலில் குறிப்­பிட்­டி­ருந்­த­ப டியே வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அவர்­களுக்கு கூடுதல் சம்­ப­ளத்தைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான எந்­த­வொரு முயற்­சியும் எடுக்­கப்­ப­ட­வில்லை. கூடுதல் சம்­பளம் பெற்றுக் கொடுப்­ப­தாக கூறப்­படும் கூற்­று க்கள் அனைத்தும் உண்­மைக்குப் புறம்­பா­ன­தாகும். புத்­தி­ஜீ­வி­க­ளான ஆசி­ரியர் சமூ­கத்­தையே ஏமாற்­றி­யி­ருக்கும் இவர்கள் பாமர மக்­களை எவ்­வ­கையில் ஏமாற்­று­வார்கள் என்­பது அம் மக்­க­ளுக்கே தெரிந்த விட­ய­மாகும்.
 
கூடுதல் சம்­பளம் பெற்றுக் கொடுப்­பது தொடர்­பான உண்மை நிலை­யி­னை­ய­றிய சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அணுகி வின­வி­ய­போது, ‘‘நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்ட உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு வர்த்­த­மானி அறி­வித்­தலில் குறிப்­பிட்­டுள்ள பிர­காரம், சம்­பளம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. கூடுதல் சம்­பளம் வழங்­கப்­பட வேண்­டு­மென்­பது குறித்து எத்­த­கைய தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை” என்று கூறினர்.
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான ஆயிரம் ரூபா சம்­பள உயர்­ வினை இ.தொ.கா. பெற்றுக் கொடுப்­பது உறு­தி­யாகும். பெற்றுக் கொடுக்க முடி­யா­விட்டால் இ.தொ.கா. அக் கோரிக்­கையை முன்­வைக்­காது. தோட் டக் கம்­ப­னி­களின் ஆத­ர­வா­ள ர்­க­ளாக செயல்­பட்­டு­வரும் மலை­யக தொழிற்­சங்­கங்கள் சில ஆயிரம் ரூபா சம்­பள உயர்­வினை வழங்க மறுக்கும் கம்­ப­னி­யா­ளர்­களை எதிர்க்­காமல் சம்­பள உயர்­வினைப் பெற்றுக் கொடுக்க முனையும் இ.தொ.கா. வை எதிர்க்­கவும், விமர்­ச னம் செய்­ய­வு­மான செயல்­பா­டு­களை மேற்­கொள்­கின்­றனர்.பெருந்­தோட்ட மக்கள் குறித்து அக்­க­றை­ யு­டனும் உணர்வு பூர்­வ­மா­கவும் செயற்­ப டும் ஒரே அமைப்பு இ.தொ.கா. மட்­டு­மே­யாகும்.
 
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேனவிற் கும் இ.தொ.கா. விற்கும் இடையில் பூரண நல்லுறவுகள் தொடர்ந்த வண்ணமேயு ள்ளன. அந் நல்லுறவுகளின் பயனாக மேலும் மூவாயிரம் தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கவும், தோட்டப் பிரிவுகள் அடிப்படையில் ஒவ் வொரு தோட்டப் பிரிவிற்கும் கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமிக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என் றார்.

Viewing all articles
Browse latest Browse all 376

Latest Images

Trending Articles


ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம் - குகையில் இருக்கும் அதிசய...


சித்தன் அருள் - 1613 - அன்புடன் அகத்தியர் - அம்பாஜி சக்தி பீடம்!


நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!


3 மாதங்களில் ரூ.16,000 அதிகரிப்பு டிஎம்டி கம்பிகள் விலை கிடுகிடு உயர்வு:...


முகம் காட்டச் சொல்லாதீர்.....


திருச்சி - ” முட்டாள் முத்து “ எனப்படும் பரமசிவம்


ஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்


சித்தன் அருள் - 1607 - அகத்தியர் அருளிய பொதுவாக்கு!


ஆசீர்வாத மந்திரங்கள்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images