Quantcast
Channel: Kumurum MALAYAKAM
Viewing all 376 articles
Browse latest View live

லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி

$
0
0
தெஹியோவிற்ற, டென்ஸ்வர்த் தோட்ட மக்கள் தமது குடியிருப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் மலையக புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்துடன் இணைந்து உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேற்படி மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சப்ரகமுவ மாகாண கேகாலை மாவட்ட தெரணியகலை டென்ஸ்வர்த் தோட்டத்தில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களாகிய நாம் கடந்த 200 வருட வரலாற்றைக் கொண்டதுடன் தேயிலை உற்பத்தியின் மூலம் அந்நிய செலாவனியை ஈட்டித்தருவதற்கு காரணமாக இருந்த எமது வாழ்வாதாரம் இன்றும் அதே நிலையில் இருக்கிறது. கவனிப்பாரற்ற நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றோம்.

தோட்ட தொழிலாளர்களின் வரலாற்றில் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறோம். அரசியல் ரீதியில் மலையகம் பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் எமது பகுதி மக்கள் அரசியல் அநாதைகளாக வாழ்ந்து வருகின்றனர். பெருந்தோட்டப்புறங்களுக்கு பல நன்மைகள் கிடைத்தும் கூட எங்கள் தோட்டத்திற்கு எந்தவித வசதி வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வரும் நமது தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்றுக்கொண்ட பின்னர் எங்களைக் கண்டுகொள்வதே இல்லை. வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை. எமது தோட்டப்பகுதிகளுக்கு அண்மித்த கிராமப்பகுதி மக்கள் 20 வருடங்களுக்கு முன்னரே தனிவீட்டு உரிமையைப் பெற்றுக் கொண்டார்கள். கிராமப்பகுதிகள் பல அபிவிருத்திகளை கண்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களான நாம் இன்னும் அதே லயன் காம்பராக்களில் சிறிய அறைகளில் குடும்பத்தில் 10 பேருக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஒன்றாக வசிக்கும் துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலை தொடருமானால் எங்கள் எதிர்கால சந்ததியினரின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கப்போகிறது. டென்ஸ்வர்த் தோட்டத்தில் தரம் 7 வரையான ஆரம்ப பாடசாலையும் இருக்கிறது. இப்பாடசாலை எவ்வித அபிவிருத்தியும் இல்லாத நிலையிலேயே இயங்கி வருகிறது. சில தேவைகள் உங்கள் கவனத்திற்கு கீழே குறிப்பிடுகின்றோம். பாடசாலை அபிவிருத்தி, பாதை அபிவிருத்தி, வாசிக சாலை வசதியின்மை, ஆலய திருத்த வேலை, மைதானம் இவ்வாறான பல தேவைகள் உள்ளன. இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றில் சில விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

அத்துடன் மிக முக்கிய விடயமான கிராமிய வீட்டு வசதி தொடர்பில் தோட்டத்தில் தற்போது இறப்பர் பால் சேகரிக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு நிலப்பரப்பில் இருந்த இறப்பர் மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அவ்விடத்தில் இடமோ பாதை, பாடசாலை, கோயில் பிள்ளை பராமரிக்கும் நிலையம், மின்சார வசதி, நீர் வசதி போன்ற பல முக்கிய தேவைகளை இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி இருக்கிறது.

அது மட்டுமல்லாது எந்தவித மண்சரிவு அபாயமும் அறிவிக்கப்படாத இடமாக இருக்கின்றது. இவ்விடத்தில் இருக்கும் மரங்களை அகற்றி மீண்டும் இறப்பரோ அல்லது வேறு எந்த பயிர்களோ பயிரிடும் முன்பதாக அந்த இடத்தை பெற்றுக் கொடுத்து லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிவீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்குமாறு பணிவோடும் மிக தாழ்மையோடும் எங்கள் தோட்ட பொது மக்களாகிய நாங்கள் எங்களுடைய கையொப்பங்களை இட்டு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

67வது குடியரசு தின விழா

இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்

$
0
0
புதிய அர­சியல் யாப்பில் இந்­திய வம்­சா­வளி தமிழர் இருப்­பையும் உரி­மை­களையும் பாது­காப்­பது பற்­றிய ஆலோ­ச­னை­களை முன்­மொ­ழி­வ­தற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் நுவ­ரெ­லியா மாவட்ட அபி­வி­ருத்தி குழுத் தலை­வரும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் செய­லா­ள­ரு­மான ஆறு­முகம் தொண்­டமான் தலை­மையில் நிய­மிக்­கப்பட்ட நிபுணர் குழுவின் புதிய அர­சி­ய­ல­மைப்­பு பற்­றிய குழு நிலை விவா­தங்கள் இடம்­பெற்­றன.
இந்த நிகழ்வு கடந்த திங்­கட்­கி­ழமை வெள்­ள­வத்தை குளோபல் டவர் ஹோட்­டலில் இ.தொ.கா வின் தலைவர் முத்து சிவ­லிங்கம், நுவ­ரெ­லியா மாவட்ட அபி­வி­ருத்தி குழுத் தலை­வரும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் செய­லா­ள­ரு­மான ஆறு­முகம் தொண்­டமான், கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர், மாகாண சபை உறுப்­பினர் சதா­சிவம், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ராதா­கி­ருஷ்ணன் உள்­ளிட்­டோரின் பங்­கேற்­புடன் இடம்­பெற்­றது.
இதன்­போது உரை­யாற்­றிய கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பி.பி.தேவராஜ் இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­களின் இருப்­பையும் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்கு மாவட்ட சுயாட்சி சபை­யொன்று அவ­சியம் என தெரி­வித்தார். இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான தயார்­ப­டுத்­தல்­களை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. காலம்­கா­ல­மாக இந்­திய வம்­சா­வளி மக்கள் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க யோச­னை­களின் போது புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளனர் வர­லாற்றை நோக்கும் போது அது புரி­கி­றது.
சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பு முதல் 2 ஆம் குடி­ய­ரசு யாப்­பு­வரை இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்­கான பிரத்­தி­யேக சொற்­பதம் கூட பாவிக்­கப்­ப­ட­வில்லை.பல்­லின மற்றும் பல் கலா­சார நாடு என அடை­யா­ளப்­ப­டுத்தும் இலங்கை தமிழ் மக்­களை மாத்­தி­ரமே சிறு­பான்­மை­யாக கருத்­திற்­கொண்­டுள்­ளது என்­பதே உண்மை. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் தமக்­கான தனி­யான அடை­யா­ளங்­க­ளையும் வரலாற்றுப் பாரம்­ப­ரி­யங்­க­ளையும் பேணி வந்­துள்­ளனர் சோல்­பரி யாப்பில் சிறு­பான்­மையின் காப்­பீ­டாக 29 (2) சரத்து அமைந்­துள்­ளது. இதனைத் தழுவி 1972 யாப்பில் அடிப்­படை உரி­மைகள் குறிப்­பி­டப்­பட்­டாலும் அவை இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு எந்­த­ளவு பய­னு­டை­யது என்­பதை கடந்த கால அனு­பவங்­களில் உணர முடிந்­தது.
13 ஆம் திருத்தத்தில் மாகா­ண­சபை அதி­கா­ரங்கள் கொண்­டு­வரப்­பட்­டாலும் நுவ­ரெ­லி­யாவில் பெரும்­பான்­மை­யாக வாழும் இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­களின் கருத்துச் சுதந்­தி­ரத்தை பயன்­ப­டுத்த முடிந்­ததா என்­பதும் கேள்­விக்­கு­றியே. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் மலை­யகத் தமி­ழர்கள் உள்­வாங்­கப்­பட்­டாலும் இந்­தியத் தமி­ழர்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்று பிரத்­தி­யே­க­மான வசனம் பாவிக்­கப்பட்டால் சாலச் சிறந்­தது.
தந்தை செல்­வா­வினால் வரை­ய­றுக்கப்­பட்ட வடக்­க­ு, கி­ழக்கு தமி­ழர்கள் மற்றும் சிங்­க­ள­வர்கள் என்ற இரு பிரி­வுகள் மாத்­திரம் உள்­ளதால் வடக்­கு, கி­ழக்­குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வாறு அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்ற கேள்­விக்­குறி எழு­ந்­துள்­ளது. அதனால் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என்ற தனி அடை­யாளம் இருக்­கு­மாயின் வர­வேற்­கத்­தக்­கது.
இதன்­படி 1996 ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்க புதிய அர­சி­யல­மைப்பு சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான மக்­களின் நல­னுக்­காக வரை­யப்­பட்ட முதன்­மை­யான யாப்­பா­கின்­றது. குறித்த யாப்பில் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான சுதந்­திரம் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் அர­சியல் உரி­மைகள் பாது­காக்கப்­ப­டு­வ­தற்­கென விட­யங்கள் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளன.
தென்­னா­பி­ரிக்க யாப்பின் மாதி­ரியை உள்­வா­ங­்கி இலங்­கையின் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும் மேலும் அந்த அர­சியல் யாப்பில் உள்ள அடிப்­படை உரிமை பற்­றிய விட­யங்­களும் அவ­சியம் உள்­வாங்­கப்­பட வேண்டும். அதேபோல் கணி­ச­மா­ன அளவு வாழும் இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­களின் எமக்கு நியாயம் தரும் வகை­யி­லான தேர்தல் முறை­மை­யொன்­றினை உரு­வாக்­கப்­பட வேண்டும்.
வட­ப­கு­தியை கருத்­திற்­கொண்டு மாத்­திரம் முன்­னெ­டுக்­கப்­படும் அதி­கா­ரப்­ப­கிர்வு இனி­வரும் காலங்­களில் இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரையும் கருத்திற் கொண்­ட­தாக அமைய வேண்டும்.
இந்­திய வம்­சா­வளி­யி­னரின் தனிப்­பட்ட கலா­சாரப் பின்­ன­ணியும் பாது­காக்­கப்­படும் வகையில் அரசியலமைப்பு வரையப்பட வேண்டும் என்றார்.

மலையக மக்களை அடையாளப்படுத்துவதற்கு தவறியதால் விளைவுகளுக்கு முகம் கொடுக்கும் நிலை

$
0
0
மலை­யக மக்கள் உரி­ய­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­த­ப்ப­டா­மையின் கார­ண­மாக பாத­க­மான விளை­வு­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்­தி­ய­வம்­சா­வளி மலை­யக தமி­ழர்கள் என்ற பொது வரை­ய­றையின் மூலம் மலை­யக மக்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் நிபுணர் குழு­விலும் இவ்­வி­டயம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரி­வித்தார்.
அதி­காரப் பகிர்வு மற்றும் அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்­தத்­திற்­கான தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் முத­லா­வது அமர்வு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மலை­யக புதிய கிராமம், உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சில் இடம்­பெற்­றது.
நிபுணர் குழுவின் தலைவர் பெ.முத்­து­லிங்கம் தலை­மையில் இடம்­பெற்ற இவ்­வ­மர்வு குறித்து கருத்து வின­வி­ய­போதே லோறன்ஸ் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் மலை­யக மக்கள் விழிப்­புடன் செயற்­பட தேவை காணப்­ப­டு­கின்­றது. சீர்­தி­ருத்த விட­யத்தில் எம்­ம­வர்கள் அச­மந்தப் போக்­குடன் நடந்து கொண்டால் பின்னால் வருத்­தப்­பட வேண்­டிய நிலைமை உரு­வா­வதை தவிர்க்க முடி­யாது.
அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த விட­யத்தில் மலை­யகம் சார்ந்த பல்­வேறு கருத்­துக்­க­ளையும் முன்­வைப்­ப­தற்கு தனி­ம­னி­தர்­களும் குழுக்­களும் தயா­ராகி வரு­கின்­றன. இந்­நி­லையில் இது தொடர்பில் ஆராயும் பொருட்டு தமிழ் முற்­போக்கு கூட்­டணி நிபுணர் குழு­வினை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இக்­கு­ழுவின் முத­லா­வது அமர்வு செவ்­வாய்க்­கி­ழமை நிறைவு பெற்­றுள்ள நிலையில் நாங்கள் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் ஆராய்ந்­தி­ருக்­கின்றோம்.
மலை­யக மக்கள் இந்­நாட்டின் மிகப்­பெரும் சக்­திகள். இவர்­க­ளது அடை­யாளம் உரி­ய­வாறு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இல்­லா­த­பட்­சத்தில் பல்­வேறு பாதக விளை­வுகள் ஏற்­ப­டு­வ­தனை தவிர்க்க முடி­யாது. மலை­யக மக்­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வதில் குழப்­ப­நிலை காணப்­ப­டு­கின்­றது. மலை­யக மக்கள், இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் என்­றெல்லாம் இவர்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றார்கள். இவை மாற்­றப்­பட்டு ஒரே பெயரில் மலை­யக மக்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மலை­யக மக்­களின் உண்­மை­யான சனத்­தொகை 4.3 சத­வீதம் என்று சில ஆவ­ணங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.
எனினும் மலை­யக மக்­களின் தொகை ஏழு சத­வீ­த­மாக உள்­ளது என்­பதே உண்­மை­யாகும். இத்­த­கைய நிலை­மைகள் குள­று­ப­டி­யினை தோற்­று­விக்கும். எனவே மலை­யக மக்­களை பொது­வான வரை­ய­றையின் கீழ் இந்­திய வம்­சா­வளி மலை­யக தமி­ழர்கள் என்­ற­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­வது பொருத்­த­மாகும்.
இந்த அடை­யா­ளத்தின் ஊடாக நாம் எமது பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தோடு மேலும் பல நன்­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும்.
இலங்­கையில் பல்­லின மக்கள் வாழு­கின்­றார்கள். அவர்­களின் உரி­மைகள் யாப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் மேல்­சபை, கீழ்­சபை என்று இரண்டு சபைகள் உரு­வாக்­கப்­ப­டுதல் வேண்டும் என்ற கருத்தும் நிபுணர் குழுவின் அமர்வில் முன்­வைக்­கப்­பட்­டது. இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸும் நிபு­ணர்கள் குழு ஒன்­றினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே கருத்­துகள் ஆரா­யப்­பட்டு பொது­வான இணக்­கப்­பா­டுகள் எட்டப்படுவதும் வரவேற்கத்தக்கதாகும். பல்வேறு தரப்பினரும் முன்மொழிவுகளை அரசியல் யாப்பு சீர்த்திருத்தக் குழுவிடம் முன்வைப்பது அவசியமாகும். ஒத்த கருத்துகளை முன்வைப்பதும் மிகவும் முக்கியமாகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர் குழுவில் எதிர்வரும் காலங்களில் மேலும் பல விடயங்கள் இது தொடர்பில் ஆராயப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.

பெருந்தோட்டங்களையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும்

$
0
0
அரசாங்கம், பெருந்தோட்டங்கள் தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் தோட்டத் தொழிலாளர்களையும் தோட்டங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

இது தொடர்பில் கூறியுள்ளதாவது, தோட்டத் தொழிலாளர்கள், சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, தேயிலைத் தோட்டங்களை தொழில்சார்  கடமைகளுக்கு மட்டும் தொழிலாளர்களுக்கு பிரித்துக்கொடுப்பதற்கு சில தோட்டக் கம்பனிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பலாங்கொடை பிளான்டேசன் கம்பனியின் பொறுப்பிலுள்ள பதுளை மாவட்டத்தின் பல தோட்டங்களில், தேயிலை உற்பத்தி குறைந்த தேயிலை மலைகளை, தொழிலாளர்;களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான முன்னெடுப்புகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.   தேயிலைத் தோட்டங்களில் தேயிலை தளிர்களை கொய்யவும் இறப்பர் தோட்டங்களில் இறப்பர் பால் எடுத்தல் மட்டுமே தொழிலாக இருந்து வருகின்றன. 

இதனால், தோட்ட உத்தியோகத்தர்கள் ஒரு சிலரை மட்டும் வைத்துக்கொண்டு, பெரும்பாலான உத்தியோகத்தர்களை கடமைகளிலிருந்து நீக்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு சேமநலன் திட்டங்கள் எதுவும் தோட்ட நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படுவதில்லை. பெரும்பாலான தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தோட்டங்களில் உற்பத்தி குறைந்த தேயிலை மலைகளை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் நிலை அமுல்படுத்தப்படுமேயானால், தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில் உத்தரவாதமோ அல்லது தொழில் பாதுகாப்போ இல்லாததோடு, ஆரோக்கியமற்ற சூழல் உருவாகும். 

அத்துடன், தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், பிரசவ சகாயநிதி, சேவைகாலப் பணம் போன்ற சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இப்படிப்பட்ட உற்பத்தி குறைந்த தேயிலை மலைகளில் தொழில் செய்யும் வேளையில் விபத்துகள் ஏற்பட்டால், விபத்துக்குள்ளானவரை வைத்தியசாலைக்கு  எடுத்துச்செல்ல வாகன வசதிகளும் வழங்கப்படமாட்டாது. அத்துடன், நட்ட ஈடுகளும் கிடைக்காது. இந்நிலை நடைமுறைப்படுத்தப்படின், தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வருவதுடன் வாழ்வாதாரங்களில் பெரும் பாதிப்புகளை அடைய வேண்டி ஏற்படும். 

பெரும்பாலான தோட்டங்களில், ஆண் தொழிலாளர்கள்  தோட்டங்களை விட்டு வெளியேறி வெளியிடங்களில் தொழில்புரிந்து வருகின்றனர். தொழிலின் நிமித்தம் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத பெண்கள், தோட்டங்களை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். எனவே, அரசாங்கம் இவ்விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும்'என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன 

மலை­ய­கத்­த­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் விரைவில் நிரந்­தர தீர்வு

$
0
0
இன­வா­தத்தை வேர­றுத்து அமைதிச் சூழலை மேம்­ப­டுத்த நல்­லாட்சி அர­சாங்கம் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது. தூர­நோக்­குடன் செயற்­படும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களால் நாட்டு மக்கள் பெரிதும் நன்­மை­ய­டைவர். மேலும் மலை­ய­கத்­த­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் விரைவில் நிரந்­தர தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது என்று ம.ம.மு  செய­லாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், நல்­லாட்­சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து ஒரு வருட காலமே நடந்து முடிந்­துள்­ளது. இந்­நி­லையில் இந்த அர­சாங்கம் தொடர்பில் பலரும் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்து வரு­கின்­றனர். இத்­த­கைய விமர்­ச­னங்­களின் நம்­ப­கத்­தன்மை தொடர்பில் நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. கடந்­த­கால அரசாங்கம் இனவாதத்திற்கு துணைபோன ஒரு அர­சாங்­க­மாக இருந்­தது. நாட்டு மக்கள் இன­வாத சிந்­த­னைக்குள் மூழ்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தனர். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்­ப­டு­வதை கூட அனு­ம­திக்­காத நிலையில் சில இனவாதிகள் உள்­ளனர். எனினும் புதிய அர­சாங்கம் தமிழ்மொழிக்கு உரிய அந்­தஸ்­தினை வழங்­கு­வ­தற்கு உறுதி பூண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

19 ஆவது திருத்­தத்தின் ஊடாக இலங்­கையில் தற்­போது பல்­வேறு ஆணைக்­கு­ழுக்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் நீண்­ட­கால இலக்­கி­னைக் கொண்­ட­ன­வாக விளங்­கு­கின்­றன. தூர­நோக்­குடன் நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. இதனால் நாட்டு மக்கள் பெரிதும் நன்­மை­ய­டைவர். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊடாக நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களும் ஒரு தாயின் மக்­க­ளாக கை­கோர்க்கும் நிலை உரு­வாகும். மேலும் மலை­யக மக்கள் உள்­ளிட்ட சகல இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் நிரந்­தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்­கையும் எமக்கு நிறை­யவே உள்­ளது. விலை­வாசி குறைப்பு போன்ற நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக பலனைத் தரும். எனினும் தூர­நோக்­குடன் செயற்­படும் போது அதன் பலன்கள் உட­ன­டி­யாக வெளித்­தெ­ரி­வ­தில்லை என்­ப­தையும் விளங்கிக் கொள்­ளுதல் வேண்டும். நீண்ட காலப்­போக்கில் நன்­மைகள் வெளித்­தெ­ரியும். நல்­லாட்சி அர­சாங்­கத்தை விமர்­சிப்­ப­வர்கள் அரசின் செயற்­பா­டுகள் தொடர்­பாக மிகவும் கூர்ந்து கவனம் செலுத்­துதல் வேண்டும். எழுந்­த­மா­ன­மாக கருத்­து­களை தெரி­விப்­பது பிழை­யா­ன­தாகும். நாட்டில் இப்­போது இன­வாத சூழல் மெது­மெ­து­வாக குறைந்து கொண்டு வரு­கின்­றது.

இன­வாதம் பேசும் ஒரு குழு­வினர் இன்னும் அர­சி­யலில் இருந்து வரு­கின்­றனர். இவர்கள் மக்­களின் நலன்­களை கிஞ்­சித்தும் சிந்­திக்­காத சுய­ந­ல­வா­தி­க­ளாவர். ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அர­சி­யலில் ஆதிக்கம் செலுத்­து­வதன் ஊடாக தன் குடும்­பத்­தையும் தன்னைச் சார்ந்­தோ­ரையும் வாழ­வைப்­பதே இவர்­களின் நோக்­க­மாக உள்­ளது. இத்­த­கை­யோரின் வழியில் செல்­வ­தற்கு நாட்டு மக்கள் இனியும் தயா­ராக இல்லை. வர­லாறு கற்­றுத்­தந்த பாடங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு இன­வா­திகள் தம்மை திருத்திக் கொள்­வது மிக மிக அவ­சி­ய­மாகும். நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கு இன­வா­திகள் குந்­த­க­மாக செயற்­ப­டு­வ­தனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்­திய வம்­சா­வளி மக்கள் "தனித்­து­வ­மான இன­மாக"ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும்

$
0
0
புதிய அர­சி­ய­ல­மைப்பில் இந்­திய வம்­சா­வளி மக்கள் "தனித்­து­வ­மான இன­மாக"ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும் இதற்கு இந்­திய அர­சாங்கம் முழு­மை­யான ஆத­ரவை வழங்க வேண்டும் என இந்­திய வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்­மா ­சு­வ­ரா­ஜிடம் வலி­யு­றுத்­தி­ய­தாக இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் முத்து சிவ­லிங்கம் தெரி­வித்தார். "தோட்டம்"என்ற சொல் கிரா­ம­மாக மாற்­றப்­பட வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
இலங்­கைக்கு இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு வருகை தந்­தி­ருந்த வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜை கடந்த சனிக்­கி­ழமை இ.தொ.கா. தூதுக் குழு­வி­னர் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினர். இது தொடர்­பாக மேலும் கூறு­கையில் ,
இந்­திய வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை கடந்த சனிக்­கி­ழமை கொழும்பில் மரி­யா­தையின் நிமித்தம் சந்­தித்தோம். இச் சந்­திப்பில் இ.தொ.கா. செய­லாளர் ஆறு­முகம் தொண்­டமான் உட்­பட முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டனர்.

இதன்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக எமது தரப்பு யோச­னை­களை முன்­வைத்தோம். அதா­வது இலங்­கையில் பல தசாப்­தங்­க­ளாக வாழும் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு உயிர் கொடுத்த இந்­திய வம்­சா­வளி மக்­கள் தனித்­து­வ­மான இன­மாக ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். அதனை புதிய சட்­ட­மாக உள்­ளீர்க்­கப்­பட வேண்டும். இதற்­காக இந்­திய அர­சாங்கம் தமது ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற எமது பக்க வேண்­டு­கோளை முன்­வைத்தோம்.
அத்­தோடு "தோட்டம்"என்ற சொல் மாற்­றப்­பட்டு மலை­யக பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் வாழும் இடங்கள் "கிராமம்"என அழைக்­கப்­பட வேண்டும். அதற்­காக அர­சாங்கம் விசேட வர்த்­த­மானி அறி­விப்பு வெளியிட வேண்டும். இதற்கு இந்­தியா ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற விட­யத்­தையும் முன்­வைத்தோம்.

தற்­போது தேயிலை தொழில்­துறை, இறப்பர் தொழில்­துறை என்பன அழிந்து கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் மலை­யக மக்கள் தமது குடி­யி­ருப்­புக்­களை விட தயா­ராக இல்லை. இந்­திய அரசின் உத­வியும் எமது காலத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட 4000 வீட்டுத் திட்டம் தொடர்­பிலும் இப் பேச்­சுக்­களின் போது கலந்­து­ரையாடப்­பட்­டது.

அத்­தோடு இந்­தி­யாவின் புல­மைப்­ப­ரி­சில்கள் திட்­டத்தில் அதி­க­ளவு இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிள்­ளை­க­ளுக்கே அவை வழங்­கப்­பட வேண்டும் என்ற விட­யத்­தையும் எடுத்­து­ரைத்தோம். இந்­திய வம்­சா­வளி மக்கள் தனித்­து­வ­மான இன­மாக ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்­டி­ய­தோடு, கல்வி, சுகா­தாரம், அடிப்­படை வச­திகள் உட்­பட முக்­கிய விட­யங்­களில் எமது மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும்.

இவ்வாறான விடயங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் முன்­வைத்து இதற்கு இந்­தியா ஆதரவை வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தோம் என்ர்.

புதிய அரசியலமைப்பில் மலையக மக்களுக்கும் இடம்..... ?

$
0
0
புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பில் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வடக்கு மாகாணத்தில் வாழும் மலையக மக்களுக்கான அபிவிருத்தி முதல் அரசியல் வரையான விசேட ஏற்பாடுகள் கொண்டு வரப்படவேண்டுமென அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு சீா்திருத்தம் மீதான மக்கள் கருத்தறியும் அமா்விலேயே மேற்படி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
45 வீதமான மலையக மக்கள் வாழ்கின்ற போதும் வடக்கு மாகாண சபையில் தங்கள் சார்பாக ஒரு உறுப்பினர் கூட இல்லை. இதுவே இந்த மக்களின் நிலைமைகளுக்கான சிறந்த உதாரணம். எனவே உள்ளுராட்சி சபைகளிலும் கூட வடக்கு வாழ் மலையக மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ற அளவு பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.
கிளிநொச்சி மேற்கில் 16 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசம், ஆணைவிழுந்தான், ஜெயபுரம் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் கிளிநொச்சி கிழக்கில் உழவனூர், புதிய புன்னை நீராவி, தருமபுரம், கல்மடுநகர், மாயவனூர், இயக்கச்சியில் கொற்றாண்டார்குளம், மேற்படி பிரதேசங்களில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாவட்டத்தின் சனத்தொகையில் ஏறக்குறைய 45 வீதமான மக்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் தனித்துவமான சமூக, பொருளாதார, கலாசார கட்டமைப்பைக் கொண்டு இருக்கின்றனர். எனினும் இவர்கள் பரந்துபட்ட ஏனைய தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களுடன் வாழ்கின்ற போதும் இவர்களுக்கான தனித்துவம் மிக்க அடிப்படை பிரச்சினைகளும், தேவைகளும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைமைகள், குடியிருக்கும் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பவற்றில் முன்னுரிமை பெறவேண்டிய அளவு நலிவுற்றவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே இவர்கள் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர் என்கின்ற தேசிய இனத்துவ அடையாளங்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன் இவர்களுடைய நலன்களுக்கும் முன்னுரிமை பெறப்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த தனித்துவமான தேசிய அடையாளத்தை மலையக மக்களுடன் இணைந்து பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அமையப்போகும் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என கோருகின்றோம்.
அத்துடன் இவர்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார அந்தஸ்தையும் பிரதிநிதித்துவத்திற்கான இடத்தையும் வழங்குவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். எனவும் தங்களின யோசனைகளை அவர்கள் இக்குழுவினரிடம் முன்வைத்தனர்.

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான விண்ணப்ப முடிவுத்திகதி 19 வரை

$
0
0
திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ருக்­கான விண்­ணப்ப முடிவு திகதி இம்­மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை வய­தெல்­லையும் 30 இல் இருந்து 35 வரை உயர்த்­தப்­பட்­டுள்­ளது. எனவே விண்­ணப்­பிக்க தவ­றி­ய­வர்­களும் வய­தெல்லை பிரச்­சி­னைக்­கு­ரி­ய­வர்­களும் இவ்­வாய்ப்பை தவ­றாது பயன்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு ஐக்­கிய தேசிய முன்னணியின் பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் உப­த­லை­வ­ரு­மா­கிய அ. அர­விந்­த­குமார் தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, சுமார் 7000 திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வி­ருக்கும் இவ்­வே­ளையில் மலை­ய­கத்தில் படித்த இளைஞர், யுவ­தி­களை அதி­க­ளவில் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென்ற இலக்­கோடு தமிழ் முற்­போக்கு கூட்­டணி செயற்­பட்டு வரு­கின்­றது. எமது கூட்­ட­ணியின் தலை­வரும், அமைச்­ச­ரு­மா­கிய மனோ­க­ணேசன் இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்­ச­ர­வை­யிலும் அதிக அழுத்­தத்தை பிர­யோ­கிக்­க­வுள்ளார். தற்­போது இந்­நாட்டில் சுமார் 19 இலட்சம் பேர் சமுர்த்தி நிவா­ர­ணத்தின் பய­னா­ளி­க­ளாக உள்­ளனர்.
ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக மிக­வ­றுமை கோட்­டிற்கு கீழுள்ள மலை­யக மக்­களோ இதில் மூவா­யி­ரத்­திற்கும் குறை­வா­ன­வர்­க­ளா­கவே பய­னா­ளி­க­ளா­க­வுள்­ளனர். எனவே திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யே­ா­கத்­தர்கள் எம்­ச­மூ­கத்­தி­லி­ருந்து அதி­க­ளவில் நிய­மனம் பெரும் பட்­சத்தில் சமுர்த்தி நிவா­ர­ணத்தை பெறு­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யையும் உணர்த்­து­வ­தற்கு இந்­நி­ய­மனம் ஏது­வாக அமையும். கீழ் கண்ட தக­மை­களை உடை­ய­வர்கள் தவ­றாது விண்­ணப்­பிக்க வேண்டும்.
க.பொ.த சாதா­ர­ண­தர பரீட்­சையில் தமிழ், கணிதம் அடங்­க­லாக நான்கு பாடங்­களில் திறமைச் சித்­தி­யுடன் ஒரே தட­வையில் ஆறு பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். க.பொ.த உயர்­தர பரீட்­சையில் 1 பாடத்­தி­லா­வது சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். வய­தெல்லை:- விண்­ணப்­பங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் இறுதித் திக­திக்கு 18 வய­துக்கு குறை­யா­மலும் 30 வய­துக்கு மேற்­ப­டா­மலும் இருத்தல் வேண்டும். பரீட்சைக் கட்­டணம் :- ரூபா 500/– (திவி­நெ­கும சமுர்த்தி வங்­கியில் செலுத்­தலாம்)
மேற்­படி பத­விக்கு விண்­ணப்­பிக்கும் விண்­ணப்­ப­தா­ரர்கள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட விண்­ணப்­ப­ப்ப­டி­வங்­களை பதி­வாளர் ஸ்ரீ ஜெய­வர்­தன விஷ்வ வித்­தி­யா­ல­யம், கங்­கொ­ட­வி­ல, நுகே­கொட என்ற விலா­சத்­திற்கு அனுப்­புதல் வேண்டும்.
விண்­ணப்பம் அனுப்­பப்­படும் கடி­த­வு­றையின் இட­து­பக்க மேல் மூலையில் திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் சேவைக்கு ஆட்சேர்ப்­ப­தற்­கான திறந்த போட்டிப் பரீட்சை 2016 என தெளிவாக குறிப்­பிட்டு 19.02.2016ஆம் திக­தி­யன்றோ அல்­லது அதற்கு முன்­ப­தா­கவோ கிடைக்­கக்­கூ­டி­ய­வாறு பதி­வுத்­த­பாலில் அனுப்பி வைக்­கப்­படல் வேண்டும்.
விண்­ணப்­பப்­ப­டி­வங்­களை மலை­யக மக்கள் முன்­னணி மற்றும் மலை­யக தொழி­லாளர் முன்­ன­ணியின் அட்டன் தலைமைக் காரி­யா­லயம் உள்­ளிட்ட அனைத்து பிராந்­திய மாவட்ட காரி­யா­ல­யங்­க­ளிலும் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் அனைத்து உள்­ளூராட்சி சபை­களின் முன்னாள் உறுப்­பி­னர்­கள், அமைப்­பா­ளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இது தொடர்பான மேலதிக தகவல்கள் எமது அனைத்து காரியாலயங்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களிடமிருந்தும், 051-4920300, 051-4020302, 051-2222793, 052-2223052, 055-2229838, 055-4928206, 055-2231526 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும் முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் அதியுச்ச அதிகார பகிர்வு

$
0
0
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் காணி பொலீஸ் அதிகாரம் உள்ளிட்ட அதியுச்ச அதிகார பகிர்வு அவசியம் என கிளிநொச்சியில் சமூக மேம்பாட்டு அமையம் வலிறுத்தியுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. முருகேசு சந்திரகுமார் அவர்களின் தலைமையில் சமூக மேம்பாட்டு அமையத்தின் உறுப்பினர்களால் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான ஆலோசனைகள் இன்று செவ்வாய்கிழமை கிளிநொச்சியில்  புதிய அரசியலமைப்பு யோசணைகள்  பெறும் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.  
புதிய அரசியலமைப்பானது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுடையதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புடன் எல்லாவகையான பாகுபாடுகளுக்கும் எதிரான உச்சப் பாதுகாப்பை வழங்கும் பொறிமுறைகளைக் கொண்டதாக அமைய வேண்டும்.
இன, மொழி, மத, சாதியக் கட்டமைப்பு, பால்நிலை பாகுபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு சுதந்திரம், சமத்துவம், சமூகநீதி, சமூகப்பாதுகாப்பு என்பன ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும். சர்வதேச மனித உரிமைச்சட்டங்களின் அனைத்து சரத்துக்களும் அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவதன் ஊடாக ஒவ்வொரு தனிமனிதனுடையதும் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
உள்வாங்கப்படும் அடிப்படை மனித உரிமைகள் பல்லினத்தன்மை கொண்ட நாடு எனும் அடிப்படையில் நடைமுறையைக் கொண்டிருப்பதற்கான பொறிமுறைகளும், புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் உள்ளடங்கியிருத்தல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தேசிய இனங்கள்
மொழி, சமயம், பண்பாட்டு மானிடவியல் அடையாளங்களுடனான சமூகங்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டு அவ் அடையாளங்களுடனான தேசிய சமூகங்களாக அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட வேண்டும்.
01.சிங்களவர்
02.தமிழர்
03.முஸ்லீம்கள்
04.மலையகத்தமிழர்
05.மலே இனத்தவர்
06.பறங்கியர்
ஒவ்வொரு தேசிய சமூகங்களும் அவற்றின் விசேட தன்மைகளையும், அடையாளங்களையும் அரசியலமைப்பு அங்கீகரித்து உத்தரவாதப்படுத்த வேண்டும். இதன்மூலமே வேற்றுமையில் ஒற்றுமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பல்லினத்தன்மை அங்கீகரிக்கப்பட்டு நீடித்த சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் எட்ட முடியும்.
எண்ணிக்கையிலான சிறுபான்மைத்  தேசிய இனங்களின் சமத்துவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேசிய இனங்களின் சபை (ர்ழரளந ழக யேவழையெடவைநைள) இனப்பிரிவுகளின் சம எண்ணிக்கையிலான சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இது பாராளுமன்றுக்கு வெளியாகவும் ஆனால் சமமான அந்தஸ்தை கொண்டதாகவும் அமைதல் வேண்டும்.
தேசிய இனங்களின் சபையானது தேசிய இனம் ஒன்றின் மொழி உரிமை, பொருளாதாரம், பண்பாட்டு விழுமியங்களின் பாதுகாப்பு என்பவற்றின் மீது நிகழ்த்தப்படும் சட்டவாக்கம், அழுத்தம் என்பவற்றை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பதோடு பொருத்தமான சட்டவாக்கங்களையும் முன்வைக்க வேண்டும்.
நீதித்துறைக் கட்டமைப்பில் உச்சநீதிமன்றத்தில் இனத்துவ விவகாரங்களுக்கான பிரிவு ஒன்றும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரிவு ஒன்றும் தனித்துவமாகச் செயற்படக்கூடிய ஏற்பாடுகள் அரசியல் உரிமை மூலம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
அரச கரும மொழிகள்
அரச கரும மொழிகளாக சிங்களம், தமிழ் என்பனவும் இணைப்பு மொழியாக ஆங்கிலமும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள போதும் நடைமுறையில் அது இதுவரை அமுலாக்கம் பெறவில்லை என்பது பகிரங்கமான உண்மையாகும். எனவே, இலங்கையின் ஆள்புலத்தில் வாழும் அனைத்து தேசிய இனங்களும் தமது தாய் மொழியில் நிர்வாகக்கருமங்களை ஆற்றக்கூடிய பொறிமுறை வலுப்படுத்தப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் அரச கருமமொழிகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு மத்திய, மாகாண, மாவட்ட, பிரதேச மட்டங்களில் நிர்வாக நீதிமன்ற மொழியாக தாய்மொழி பயன்படுத்தப்படுதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கல்விச் செயற்பாட்டில் காணப்படும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அமுலாக்கப்பட்டுள்ள மும்மொழித்திறன் தேர்வை முன்னுதாரணமாகக் கொண்டு க.பொ.த சாதாரண தரம் வரை  கலைத்திட்டத்தில் மும்மொழிக் கற்கை அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தேர்தல் முறை
இலங்கையின் சமாதான சகவாழ்வு உறுதிசெய்யும் முறையிலான சீர்திருத்தங்களை ஏற்பாடு செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதிவாரியான பிரதிநிதித்துவத்திற்கு மேலதிகமாக எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவம், சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் போன்ற கலப்பு முறைப் பிரதிநிதித்துவம் மூலமே ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும். எனவே, அரசியலமைப்பின் ஊடாக இவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மகளீர் பிரதிநிதித்துவத்துக்கான பால்நிலைச் சமத்துவத்தின் முன் நிபந்தனையாக உள்ளூராட்சிச் சபைகளில் மகளீருக்கான ஒதுக்கீடு மூன்றில் ஒன்றாகவும், மாகாணசபைகளில் ஐந்தில் ஒன்றாகவும், பாராளுமன்றில் ஆறில் ஒன்றாகவும் மகளீர் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மூன்றில் ஒரு பங்கு உள்ளூராட்சி சபைகளின் தலைமைப்பொறுப்பை பெண்கள் வகிக்கக்கூடிய அடிப்படையில் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்கப்படலாகாது.

அதிகாரப்பகிர்வு
வடக்குக் கிழக்கு இணைந்ததான பிராந்திய சபை அரசியலமைப்பு மூலம் உறுதிசெய்யப்படல் வேண்டும். இச்சபைக்குள் காணப்படும் எண்ணிக்கையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் சிறப்புரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படல் வேண்டும்.
அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பில் தெளிவான வியாக்கியானம் உடையவையாக அமைதல் வேண்டும். மயக்கமான கருத்துக்கள், தப்பான மொழிமாற்றத்திற்கான சந்தர்ப்பங்கள் கொண்டவையாக இவ்விடயங்கள் அமையக்கூடாது.
மாகாணசபையின் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபையின் காலங்களில் மாகாணசபையின் முதலமைச்சருக்கு உரியதாகவே வரையறை செய்யப்பட வேண்டும்.
மாகாணசபைகள் முதலமைச்சர் நிதியம், அவசரகால நிதியம், இடர் முகாமைத்துவ நிதியம், மாகாண அபிவிருத்தி நிதியம் என்பவற்றை மாகாணசபைகள் ஸ்தாபிப்பதற்கும், செயற்படுத்துவதற்குமான அதிகாரம் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மாகாணசபைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசின் ஆலோசனை தவிர்ந்த நேரடித்தலையீடுகள் இடம்பெறாது இருப்பதை அரசியலமைப்புத் திருத்தம் உறுதிசெய்தல் வேண்டும்.
மாகாணசபையின் ஆட்புலத்திற்கு உட்பட்ட மத்திய அரசின் விடயங்களை நடைமுறைப்படுத்துதலில் குறித்த மாகாண முதலமைச்சரின் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் உள்வாங்க வேண்டும்.
இதேபோன்று உள்ளூராட்சிச் சபைகளின் கையாள்கைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசு மற்றும் மாகாண அரசுகளின் நேரடித்தலையீடு தவிர்க்கப்படுதல் அரசியலமைப்புச்; சீர்திருத்தத்தில் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மத்திய அரசுக்கும் மாகாண அரசுகளுக்கு இடையேயும், மாகாண அரசுகளுக்கும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையேயும் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான அதிகாரப்பகிர்வு ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
இது சுயாதீனமானதும், சட்ட வலுவுடைய நிறுவனமாகவும் செயற்படுவதை அரசியலமைப்புச் சீர்திருத்தம் உறுதிசெய்ய வேண்டும்.
மலையக மக்களின் சிறப்புரிமை (கிளிநொச்சி மாவட்டம் சார்பானது)
கிளிநொச்சி மேற்கில் 16 கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசம், ஆனைவிழுந்தான், ஜெயபுரம் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் கிளிநொச்சி கிழக்கில் உழவனூர், புதிய புன்னைநீராவி, தருமபுரம், கல்மடுநகர், மாயவனூர், இயக்கச்சியில் கொற்றாண்டார்குளம், லுஆஊயு குடியிருப்பு ஆகிய மேற்படி பிரதேசங்களில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாவட்டத்தின் சனத்தொகையில் ஏறக்குறைய 45 வீதமான மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தனித்துவமான சமூக, பொருளாதார, கலாசார கட்டமைப்பைக் கொண்டு இருக்கின்றனர். எனினும் இவர்கள் பரந்துபட்ட ஏனைய தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களுடன் வாழ்கின்ற போதும் இவர்களுக்கான தனித்துவம் மிக்க அடிப்படை பிரச்சினைகளும், தேவைகளும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைமைகள், குடியிருக்கும் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பவற்றில் முன்னுரிமை பெறவேண்டிய அளவு நலிவுற்றவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே இவர்கள் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர் என்கின்ற தேசிய இனத்துவ அடையாளங்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன் இவர்களுடைய நலன்களுக்கும் முன்னுரிமை பெறப்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த தனித்துவமான தேசிய அடையாளத்தை மலையக மக்களுடன் இணைந்து பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அமையப்போகும் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என கோருகின்றோம்.
அத்துடன் இவர்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார அந்தஸ்தையும் பிரதிநிதித்துவத்திற்கான இடத்தையும் வழங்குவதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.
வளப்பகிர்வு
எமது நாட்டின் வளங்களான கனிமவளங்கள், ஆளனிவளங்கள், நீர்நிலைகள், நீர்வளங்கள், நிலவளங்கள், வனவளங்கள் போன்றவை தேவைக்கேற்ப வளப்பகிர்வுகளைப் பங்கிடுவதற்கு தேவையின் அடிப்படையில் ஒரு பொதுக்கொள்கை வகுக்கவேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. இதனைப்பெறுவது அல்லது பயன்படுத்துவது ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமையை மீறாத வகையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் நியாயம் கிடைக்கத்தக்க வகையில் பங்கீடு செய்வதை புதிய அரசியலமைப்பு உறுதி செய்யவேண்டும்.
விவசாயப் பொருளாதார நாடான எமது நாட்டின் விவசாயிகளினுடைய அடிப்படை உரிமைகள் அரசியல் சாதனத்தின் ஊடாக பாதுகாக்கப்பட வேண்டும். தேவை கூடிய பிரதேசங்கள் அல்லது அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசங்கள், அபிவிருத்தி செய்வதற்கு விசேட ஏற்பாடுகள் ஊடாக அபிவிருத்தி செய்து சமச்சீராக எல்லாப் பிரதேசங்களும் எல்லா வளங்களும் உடைய பிரதேசங்களாக மாற்றி எல்லா மக்களுடைய அடிப்படை உரிமைகளையும் புதிய அரசியலமைப்பு பாதுகாக்க வேண்டும்.
அரசியலமைப்பில் சொல்லப்பட்ட விடயங்கள் அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்வதற்கு அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு ஓர் விசேட ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்பதையும் அரசியலமைப்பு உறுதிசெய்ய வேண்டும்.

பொதுச்சேவைகள்.
எமது நாட்டின் புதிதாக அரச சேவைகளுக்குள் உள்வாங்கப்படுபவர்கள் அனைவரும் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் க.பொ.த சாதாரண சித்தியை வலியுறுத்துவதன் மூலம் தேசிய பொதுச்சேவைகள் வினைத்திறனுள்ளதாக அமைவதையும், நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்பு
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைய வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.
பொலிஸ் நியமனங்களின் போதும் இன விகிதாசாரங்கள் பேணப்படல் வேண்டும். அவ்வாறே இராணுவம் கடற்படை விமானப்படை போன்றவற்றின் ஆட்சேர்ப்பு அல்லது நியமனங்களின் போது நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைய நியமனங்கள் செய்வதன் மூலம் நல்லிணக்கத்தையும், பொதுமக்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்யக்கூடிய அரசியலமைப்புத் திருத்தத்தை வேண்டுகிறோம்.
உழைப்பாளர்களையும், உற்பத்தியாளர்களையும் பாதிக்காதவாறும் பாதுகாப்பானதாகவும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறாத வகையிலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றம் செய்வதை அரசியல் சாதனத்தின் ஊடாக உறுதி செய்தல் வேண்டும்.
பாரிய அபிவிருத்திகளின் போதும் பொருளாதார கொள்கைகளைச் சீரமைக்கும் போதும் அதுதொடர்பான சமூகங்களின் பிராந்திய ரீதியாக கருத்துக்கணிப்பு பெற்று மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொறிமுறையை ஏற்படுத்தி அடிப்படை உரிமைகளைப் பேணுவதனூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடும் காலம் வெகு தொலைவில் இல்லை

$
0
0
தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொண்டு பாரா­ளு­மன்றம் வந்து ஒரு வருடம் கழிந்தும் அம் மக்­க­ளுக்­கான சம்­பள உயர்வை பெற்றுக் கொடுக்­க­வில்லை. வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­ப­டவும் இல்லை. எனவே தோட்டத் தொழி­லா­ளர்கள் வீதியில் இறங்கிப் போராடும் காலம் வெகு தொலைவில் இல்­லை­யென ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி. மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பள சபைகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் ஒழுங்­கு­விதி அங்­கீக­ரிக்­கப்­ப­டு­வ­தற்­காக தொழி­லாளர் அமைச்சு முன்­வைத்த பிரே­ரணை விவா­தத்தில் உரை­யாற்றும் தெரி­வித்தார்.

வாழ்­வ­தற்கு வழி­யில்­லாது மல­ச­ல­கூட வச­தியும் இல்­லாது தோட்டத் தொழி­லா­ளர்கள் கஷ்­டத்தில் வாழ்­கின்­றனர். மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்று தொழில் இல்­லாமல், வாழ்­வ­தற்கு வழி­யில்­லாமல் பெரும் கஷ்­டத்தில் வாழ்­கின்­றனர்.

ஜன­வ­சம உட்­பட பல கம்­ப­னிகள் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பளத்தை நேரத்­திற்கு வழங்­கு­வ­தில்லை. ஊழியர் சேம­லாப நிதி, ஊழியர் நம்­பிக்கை நிதி செலுத்­தப்­ப­டு­வ­தில்லை. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஒரு நாள் சம்­ப­ள­மாக ரூபா 620 தான் வழங்­கப்­ப­டு­கி­றது. 3 நாட்கள் தான் வேலை கிடைக்­கின்­றது. இந்தச் சம்­ப­ளத்தை பெற்றுக் கொண்டு எவ்­வாறு தோட்டத் தொழி­லா­ளர்கள் வாழ முடியும். தோட்டத் தொழி­லா­ள­ருக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்போம். சம்­பள உயர்வை வழங்­குவோம் என உறு­தி­மொ­ழி­களை வழங்கி பாரா­ளு­மன்றம் வந்­த­வர்கள் இன்று உறு­தி­மொ­ழி­களை காற்றில் பறக்­க­விட்டு அம் மக்­களை ஏமாற்றி கஷ்­டத்தில் தள்­ளி­விட்­டுள்­ளனர்.

2500 ரூபா சம்­பள உயர்வும் இல்லை. வீடும் இல்­லாமல் தோட்டத் தொழி­லா­ளர்கள் லயன் அறைகளிலேயே வாழ்­கின்­றனர். தோட்டத் தொழி­லா­ளர்­களை ஏமாற்­றா­தீர்கள். அவர்­க­ளுக்கு வாழ்­வ­தற்கு வழி ஏற்­ப­டுத்திக் கொடுங்கள். தொழி­லா­ளர்­க­ள் இன்று மல­சல கூட வச­தியும் இல்­லா­ம­லேயே வாழ்­கின்­றனர். எனவே மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை வட­ப­குதி அர­சி­யல்­வா­திகள் இங்கு சபையில் பேச வேண்டும். மலை­ய­கத்தை சேர்ந்­த­வர்கள் கிளி­நொச்­சியிலும் வாழ்­கின்­றனர்.

அத்­தோடு தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்­தி­லி­ருந்து மரண சகாய நிதி­யாக ரூபா 100 அறவிடப்படுகிறது. ஆனால் தொழி­லாளி இறக்கும் போது மரண நிதி­யு­தவி வழங்­கப்படுவ­தில்லை. சவப்­பெட்டி கொள்வனவு செய்யவும் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.

தொழிலாளி இறந்து 3 வருடங்களுக்குப் பிறகுதான் மரண உதவி, நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தான் இன்றைய தோட்டத் தொழிலாளர்களின் நிலையாகும் என்றார்.

மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை தடுப்பவர்கள் சமூகத்துரோகிகளாவர்

$
0
0
மலை­ய­கத்­திற்­கென்று தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வது காலத்தின் தேவை­யாகும். இதனை தடுக்க நினைப்­ப­வர்கள் சமூ­கத்தின் துரோ­கி­க­ளாவர் என்று பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன்  மலை­ய­கத்­திற்கு தனி­யான பல்­க­லைக்­க­ழ­க­மொன்று அவ­சி­யம்­தானா? என்பது தொடர்பாக கருத்துக்கேட்ட போது இவ்வாறு தெரிவித்தார்

அவர்  மேலும் தெரி­விக்­கையில், மலை­ய­கத்­திற்கு தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வதன் அவ­சி­யத்தை நான் கடந்த பத்து ஆண்­டு­க­ளுக்கும் மேலாக வலி­யு­றுத்தி வரு­கின்றேன். இது தொடர்­பாக அர­சி­யல்­வா­தி­க­ளையும் தெளி­வு­ப­டுத்தி இருக்­கின்றேன். மலை­ய­கத்தைச் சேர்ந்த பல புத்­தி­ஜீ­வி­களும் இதனை வர­வேற்றுப் பேசி­யுள்­ளனர். அமரர் பெ.சந்­தி­ர­சே­க­ர­னினால் கடந்த காலத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆலோ­ச­னைக்­கு­ழுவும் இது பற்றி தீவி­ர­மாக ஆராய்ந்­தது. இந்­நி­லையில் பல்­க­லைக்­க­ழக நிலை­மாறி பல்­க­லைக்­க­ழக கல்­லூரி தொடர்­பிலும் இப்­போது கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும்.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழகம் மற்றும் கிழ­ககு பல்­க­லைக்­க­ழகம் போன்று மலை­ய­கத்­திற்கு தனி­யான ஒரு பல­்க­லைக்­க­ழகம் தேவை என்­ப­தனை பெரும்­பான்மை சிங்­க­ளவர், சிங்­கள மக்கள் கூட எதிர்க்­க­வில்லை. எனினும் மலை­ய­கத்தைச் சேர்ந்த சில விஷ­மிகள் இதனை எதிர்த்து வரு­கின்­றனர். இன ரீதி­யாக பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வது பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்றும் இவர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர். இத்­த­கை­யோரை மலை­யக சமூ­கத்தின் துரோ­கி­க­ளா­கவே கருதவேண்டி இருக்­கின்­றது. இவர்கள் தமது நிலை­யினை மாற்றிக் கொண்டு சமூக முன்­னேற்றம் கருதி செயற்­பட வேண்டும்.

மலை­ய­கத்­துக்­கென்று தனி­யாக ஒரு பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மானால் மலை­யக சமூ­கத்தின் இனத்­துவ அடை­யாளம் பாது­காக்­கப்­ப­டு­வ­தோடு மேலும் பல நன்­மை­களும் உரு­வாகும் நிலை ஏற்­படும். மலை­யக நாட்டார் பாடல்கள், மலை­யகக் கல்வி, மலை­யக கலா­சாரம், மலை­யக சிந்­தனை, மலை­யக பாரம்­ப­ரியம் என்ற ரீதியில் மலை­யகம் தொடர்­பான பல்­வேறு இனத்­துவ அடை­யா­ளங்­க­ளையும் தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­படும் பட்­சத்தில் உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டிய வாய்ப்பு உரு­வாகும்.

காமன் கூத்து உள்­ளிட்ட மேலும் பல தனித்­து­வ­மான விட­யங்­களை வேறு பல்­க­லைக்­க­ழக செயற்­பா­டு­களின் ஊடாக நாம் எதிர்­பார்க்க முடி­யாது. அதே­வேளை மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தின் மூல­மாக இத்­த­கைய விட­யங்­களை நாம் உள்­வாங்கிக் கொள்­ளவும் உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளவும் முடியும் என்­ப­த­னையும் குறிப்­பிட்டுக் கூற வேண்­டி­யுள்­ளது. மேலும் மலை­யகம் தொடர்­பான கற்கை நெறி­க­ளை நாம் மலை­ய­கத்­திற்­கென்று தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­படும் பட்­சத்தில் ஏற்­ப­டுத்திக் கொள்ள முடியும். சமூக அபி­வி­ருத்­திக்கு இத்­த­கைய நிலை­மைகள் பெரிதும் உந்து சக்­தி­யாக அமையும் என்­ப­த­னையும் மறுப்­ப­தற்­கில்லை.

தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்கும் நட­வ­டிக்­கைகள் தாம­த­மாகும் சந்­தர்ப்­பத்தில் தனி­யான பல்­க­லைக்­க­ழக கல்­லூரி ஒன்­றினை மலை­ய­கத்­துக்­கென்று அமைப்­பது தொடர்பில் கவனம் செலுத்­து­வதில் தப்­பில்லை. ஆனாலும் கல்­லூ­ரியைக் காட்­டிலும் தனி­யான பல்­க­லைக்­க­ழ­கமே காலத்தின் தேவை­யாகும் என்­ப­தனை யாரும் மறந்து விடக்­கூ­டாது.

தனி­யான பல்­க­லைக்­க­ழகம் மலை­ய­கத்­துக்­கென்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பது தொடர்பில் மலை­யக அர­சி­யல்­வா­திகள், புத்­தி­ஜீ­விகள் உள்­ளிட்ட சகல தரப்­பி­னரும் ஒன்­று­பட்டு குரல் கொடுக்க வேண்டும். கருத்து முரண்பாடுகள் இவ்விடயத்தில் களையப்படுதல் வேண்டும்.
ஏனைய சமூ­கங்­களைப் போன்று நாம் பல்­வேறு வெற்றி இலக்­கு­க­ளையும் அடைந்து கொள்ள வேண்டும். இதற்கு தனி­யான பல்­க­லைக்­க­ழகம் வாய்ப்­ப­ளிக்கும் என்­பது உறு­தி­யாகும். வீணான சாட்­டுக்­களைக் கூறி தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்கும் நிலைமை இழுத்­த­டிக்­கப்­ப­டு­மானால் எதிர்­கால சந்­த­தி­யினர் நிச்­சயம் பழி சொல்வர் என்­ப­த­னையும் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். சிந்தித்து செயல்படுவோம் என்றார்.

சம்பள அதிகரிப்பு தொடர்பான சட்டமூல கூட்டு ஒப்­பந்தம் முர­ணாக காணப்­ப­டு­கின்­றது

$
0
0
அடிப்­படைச் சம்­பள அதி­க­ரிப்பு தொடர்­பான சட்­ட­மூ­லத்தை பெருந்­தோட்டத் துறையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கூட்டு ஒப்­பந்தம் முர­ணாக காணப்­ப­டு­கின்­றது. அது­தொ­டர்­பி­லான உரிய மீளாய்­வு­களைச் செய்­ய­வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.தில­கராஜ் சம்­பளச் சபைக் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் ஒழுங்கு விதி­களை அங்­கீ­க­ரிப்­பது குறித்த பிரே­ரணை குறித்த விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே  தெரி­வித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்வீட்டு வேலை­யாட்­களை உள்­வாங்கக் கூடி­ய­தான சட்ட நடை­மு­றை­யொன்று இந்­தி­யாவில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவின் ராஜஸ்­தானில் வீட்டு வேலை­யாட்­க­ளாகப் பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்கு 540 ரூபா குறைந்த பட்ச வேத­னமா­க வழங்­கப்­பட வேண்­டு­மென அச்­சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான நிலை­யி­லேயே எமது நாட்டில் உள்ள தொழி­லா­ளர்­க­ளுக்கு அடிப்­படைச் சம்­பளம் தொடர்­பான சட்­ட­மூலம் தொடர்பில் பேசு­கின்றோம். தோட்டத் தொழி­லாளர் விவ­காரம் குறைந்த பட்ச வேதன சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்டும் இச்­ச­பையில் பலர் வலி­யு­றுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

தனியார் துறைக்­கான 2500 ரூபா அதி­க­ரிப்பை பெருந்­தோட்டத் தொழி லா­ளர்­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுத்தி­ருப்­ப­தற்கு எடுத்­தி­ருக்கும் நடவடிக் ­கையை வெற்­றி­யாகக் கருதமுடியும். நாளொன்­றுக்கு குறைந்த பட்ச வேதனம் 400 ரூபா­வா­கவும், மாதாந்தம் 10ஆயிரம் ரூபா­வா­கவும் இருக்கும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனினும் தோட்­டத்­தொ­ழி­லாளர் விவ­கா­ரத்தில் கூட்டு ஒப்­பந்தம் முறையின் கீழ் செல்­லும்­போதும் அர­சாங்­கத்தின் இந்த குறைந்த வேதன சட்டம் கிடைப்­பது சிக்­க­லுக்­குள்­ளாகும். கூட்டு ஒப்­பந்தம் இதற்கு தடை­யாக அமையும். இத­னால்தான் நாம் தொடர்ந்தும் கூட்டு ஒப்­பந்­தத்தை கேள்­விக்கு உட்­ப­டுத்தி வரு­கிறோம். குறிப்­பாக தொழி­லா­ளர்­களின் வர­வுடன் சம்­பந்­தப்­பட்­ட­தாக கூட்டு ஒப்­பந்தம் காணப்­ப­டு­கி­றது.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் நிலு­வை­யி­லுள்ள ஊழியர் சேம­லாப நிதி­யத்தை செலுத்­து­வ­தற்­காக தோட்­டங்­களில் உள்ள மரங்­களை வெட்டி அதன்­மூலம் கிடைக்கும் வரு­மா­னத்தை பயன்­ப­டுத்­து­மாறு கடந்த அர­சாங்­கத்­தினால் வழி­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தது. இயற்­கையை அழித்­தொ­ழித்­து­விட்டு நிலைத்­தி­ருக்கக் கூடிய அபி­வி­ருத்தி பற்றி எவ்வாறு பேசமுடியும். எனவே இதுபோன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தமது தொழில் மீது பற்றுக்கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு சிறந்த எதிர் காலம் உறுதிப்படுத்தப்படவேண்டுமென்றார்.

அலட்சியம் வேண்டாம் வேதனையளிக்கிறது

$
0
0
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான கூட்டு ஒப்­பந்தம் இது­வரை கைச்­சாத்­தி­டப்­ப­டாத நிலையில் அந்த மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டு­வ­ரு­கின்­றனர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான கூட்டு ஒப்­பந்­தத்தை உரு­வாக்கும் நோக்கில் தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் இடையில் பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­ற­போதும் அனைத்து பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வியில் முடி­வ­டைந்­துள்­ளன.

இந்­நி­லையில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மாதாந் தம் 2500 ரூபா கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. எவ்­வா­றெ­னினும் அர­சாங்கம் இந்த விட­யத்தில் தலையிட்டு தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கலாம். அர­சாங்கம் தலை­யிட்­டி­ருந்­தாலும் ஒன்றும் நடக்­க­வில்லை. ஏற்­க­னவே இருந்த கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாக தற்­போது ஒரு வருடம் பூர்த்­தி­யா­கப்­போ­கின்ற நிலையில் இன்னும் புதிய கூட்டு ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­திட முடி­ய­வில்லை.

நாட்டின் ஏனைய தொழிற்­து­றை­யினர் பெறு­கின்ற சம்­ப­ளத்­துடன் ஒப்­பி­டு­கையில் மிகவும் குறைந்­த­ள­வி­லான சம்­ப­ளத்­தையே தோட்டத் தொழி­லா­ளர்கள் பெறு­கின்­றனர். அவர்கள் தமக்கு அதி­க­ரித்­துக்­கொ­டுக்­கு­மாறு கோரி­யி­ருக்கும் சம்­பளத் தொகையும் நியா­ய­மா­ன­தா­கவே உள்­ளது. அந்த தொகைக்­கூட நாட்டின் ஏனைய துறை­யினர் பெறும் சம்­ப­ளத்­துடன் ஒப்­பி­டு­கையில் மிகவும் குறை­வா­ன­தாகும்.

இந்­நி­லையில் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்கு வழி வகுக்கும் கூட்டு ஒப்­பந்­தத்தை இது­வரை கைச்­சாத்­தி­டாமல் இருப்­ப­தா­னது ஒரு வகையில் அந்த மக்­களின் உரி­மை­களை மீறு­வ­தா­கவே அமைந்­துள்­ளது.

குறிப்­பாக தோட்டத் தொழி­லா­ளர்கள் இந்த நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முது­கெலும்­பாக இருக்­கின்­றனர். ஆனால் அவ்­வாறு நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு முது­கெலும்­பாக இருக்கும் மக்­க­ளுக்கு ஒரு­வ­ருட கால­மாக சம்­பள உயர்வை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விடின் இது எந்­த­ளவு தூரம் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும் என்­பது புரி­கின்­றது.

எனவே அர­சாங்கம் இந்த விட­யத்தில் அலட்­சி­யப்­போக்கில் இருக்­க­வேண்டாம். குறிப்­பாக தொழிற்­சங்­கங்­களும் முத­லாளி மார் சம்­மே­ள­னமும் இதனை பார்த்­துக்­கொள்­ளட்டும் என்று அர­சாங்கம் இருந்­து­வி­டக்­கூ­டாது.

விசே­ட­மாக புதிய அர­சாங்­கத்­துக்கு தோட்டத் தொழி­லா­ளர்கள் பாரிய நம்­பிக்­கை­யுடன் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். எனினும் இந்த அர­சாங்­கமும் அந்த மக்­களின் இந்த பிரச்­சினை தொடர்பில் அலட்­சி­யப்­போக்­குடன் இருந்­து­வி­டக்­கூ­டாது. உட­ன­டி­யாக இந்த விட­யத்தில் தலை­யிட்டு அவர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பள அதி­க­ரிப்பை வழங்­க­வேண்டும்.

மேலும் மலை­யக அர­சியல் தலை­மைத்­து­வங்­களும் இந்த விடயம் தொடர்பில் அதிக அக்­கறை செலுத்­த­வேண்டும். வர­லாறு முழு­வதும் தோட்டத் தொழி­லா­ளர்கள் பல்­வேறு விட­யங்­களில் ஏமாற்­றப்­பட்டு வந்­துள்­ளனர்.

குறிப்­பாக சுகா­தாரம், கல்வி உள்­ளிட்ட பல்­வேறு வச­திகள் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே அந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ஆனால் தற்போது உரிய முறையில் சம்பள உயர்வுக்கூட வழங்கப்படாமல் உள்ளனர்.

எனவே இந்த விடயத்தில் தொடர்ச்சியாக அலட்சியப்போக்குடன் இருக்கவேண்டாம். இது வேதனையளிக்கும் விடயமாகும். வேதனை தொடர்வதற்கு இடமளிக்கவேண்டாம்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தேசிய பிரச்சினையே

$
0
0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தேசிய பிரச்சினையே

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தேசியத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இதை உடன் தீர்க்காவிட்டால் இது தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில்  சம்பள கட்டளைகள் சட்டத்திருத்தத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்                                   

மேலும் தெரிவிக்கையில், தனியார்துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக அரசு கூறுகின்றது. இந்தச் சம்பள அதிகரிப்பு கட்டாயமாக செய்யப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, இந்தச் சம்பள அதிகரிப்பானது 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்.

இதேவேளை, தனியார்துறையினருக்கான சம்பள அதிகரிப்பில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கும் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு செய்யவுள்ளதாக அரசு கூறுகிறது.
இந்தச் சம்பள அதிகரிப்பு பற்றி அரசு தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஏனெனில், இந்த விடயத்தில் அரசு மூடிமறைத்து செயற்படுகின்றது. மலையக மக்கள் விடயத்தில் ஏன் இவ்வாறு அநீதியாக செயற்படுகின்றீர்கள்?

மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை தேசியத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இதை உடன் தீர்க்காவிட்டால் இது தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும் எனத் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களிற்கு உழைப்பிற்குரிய சம்பளத்தை வழங்கவேண்டும்

தோட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை நாளொன்றுக்கு 500 ரூபா சம்பளமே வழங்கப்பட்டு வருவதாகவும், சம்பள அதிகரிப்பை செய்ய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதி, சரியான வாழ்வாதார முறையின்றி மலையக தோட்ட தொழிலாளர்கள் லயன் அறைகளில் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ப சம்பளம் வழங்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரின் சம்பளம், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன சரியான முறையில் வங்கியில் இடப்படுவதில்லை எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

வேலையை விட்டு விலகிச் செல்லும் போது ஊழியர் சேமலாப நிதியை அவர்களால் சரியான முறையில் பெற முடிவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான கண்காணிப்புக்கள் சரியான முறையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கமொன்றின் விலையே ஊழியர்களின் அடிப்படைச் சம்பளமாக அமைய வேண்டும். புதிய ஆட்சி ஏற்பட்டிருக்கின்ற போதும் தனியார் மற்றும் மலையக தேசிய தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. அத்தகை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. தற்போது அத்தரப்பினருக்கு உட்பட்ட வகையில் உரிய கொடுப்பனவு கிடைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை. 500 ரூபா கொடுப்பனவில் அவர்களிகன் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடியான நிலைமைக்குள் தினமும் முகம் கொடுத்து வருகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் அவர்கள் வாழ்வதற்கான வீடுகள் காணிகள் கூட இல்லாது பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.

அவர்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இச்சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். இந்நாட்டில் பட்டதாரிகள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் நான்கு ஆண்டுகள் கற்கைகளை நிறைவு செய்த பின்னர் தொழில் வாய்புக்களுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதுடன் மேலும் மூன்று நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்கள். போராட்டங்களை நடத்துகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்க வேண்டும் என்றார்.

அரவிந்த குமார் பாராளுமன்றத்தில் இது பற்றி உரையாற்றுகையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் இந்த வாழ்க்கைச் செலவு உயர்வடைந்து செல்கின்றது.

1992ம் ஆண்டில் பெருந்தோட்டங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது வாழ்க்கைச் செலவு படி அதிகரிக்கப்படவில்லை. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சிறு சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது.

அவ்வாறு இல்லாமல் சம்பள நிர்ணய சபையின் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்தால் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் இன்று கூடுதல் சம்பளத்தை பெற்றுக்கொண்டிருப்பார்கள்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களையும் உயர்த்த தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அந்த உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியதாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை வழங்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோருகின்றேன். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்

மகிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் வடக்கை பிரதிநிதிதுவ படுத்தக்கூடிய நாடுளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்றார். மலையக மக்களும் வடக்கு பகுதிகளில் வாழ்ந்து வருவதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் குரல் கொடுக்காமல் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இன்று நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கிய குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு தமிழ் மொழியில் தமது கோரிக்கைகளை மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள்

$
0
0
கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் கோப்புகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த முறையும் அதனை செய்யாமல் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கூட்டம் நடைபெறுவதில் எவ்வித பயனும் இல்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பழனி திகாம்பரம்,பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் (15.02.2016) அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
நுவரெலியா நானுஒயா காந்தி மண்டபத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த பொலிஸ் நியைத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு இங்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
(15.02.2016) அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச, மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டதுடன் அமைச்சர்களான பழனி திகாம்பரம், நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம், மயில்வாகனம் திலகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வரவேற்பு உரையை நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முல்ல வழங்கியதோடு இதன்போது அவர் இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவே உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்திற்கு வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரட்ணயாக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரில் 6 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,மாநகர சபை, நகர சபை உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் இந்த தீர்மானத்தை சபைக்கு முன்வைத்தார்.
குறித்த காந்தி மண்டபம் அமைந்துள்ள பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே எமது பெருந்தோட்ட மக்கள் தமது கலைகலாச்சார நடவடிக்கைகளை இந்த மண்டபத்தின் வாயிலாகவே முன்னெடுக்கின்றனர். எனவே இதற்கு அருகாமையில் காவல் நிலையம் ஒன்றை அமைப்பது பொறுத்தமற்ற ஒரு செயலாக அமைந்துவிடும். எனவே அதனை வேறு ஒரு இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இந்த சபையின் ஊடாக ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என அவர் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததார்.இதனை தொடர்ந்து மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு இந்த காந்தி மண்டபத்தை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.எனவே இதனை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பது பொறுத்தமாக இருக்கும் என தனது கருத்தை முன்வைத்ததை தொடர்ந்து இதனை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புகள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மரத் தூண்கள் அமைக்கப்பட்டவை என்பதால் தற்பொழுது அவை பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. எனவே அவை முறிந்து விழும் நிலையில் இருப்பதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக அவற்றை அகற்றி கொன்கிறீட் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மின்சார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
நானுஒயா டெஸ்போட் சுற்றுவட்ட பாதை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.அதாவது இந்த சுற்று வட்ட பாதை வழியாக பேருந்துகள் பயணிப்பதில்லை எனவும் பேருந்துகள் அனைத்தும் குறுக்கு வழியாக செல்வதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலளார் எலன் மீகஸ்முல்ல தனது கருத்தை முன்வைத்தார்.
இதற்கு தேசிய போக்குவரத்து அதிகாரசபையும் ஹட்டன் போக்கு வரத்து சபையும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் எனவே இந்த பிரச்சினை தற்பொழுது தீhக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.எனவே இது தொடர்பாக நானுஒயா பொலிஸ் நிலையத்திற்கு ஆராய்ந்து பார்த்து தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

சம்பள சட்டத்தில் வீட்டுப் பணியாளர்களையும் சேர்க்க வேண்டும்

$
0
0

இலங்கையில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான புதிய சட்டத்தில் வீட்டுப் பணியாளர்களையும் சேர்க்குமாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பள கொடுப்பனவுச் சட்டம் பொதுச் சட்டமாகக் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அதில் வீட்டுப் பணியாளர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கோரி அந்தத் தொழிலாளர்களுக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த புதிய சட்டம் தொடர்பில் அரச வர்த்தமானியில் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதில் நியாயமற்ற விதத்தில் வீட்டுப் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில் தொழிலாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் சரியான முறையில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு போதுமானதல்ல என்ற காரணத்தினாலேயே புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும், வீட்டுப் பணியாளர்களை ஏனைய தொழிலாளர்களை போன்று அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கென தனியான தொழிற்சங்கம் ஒன்று செயற்படுவதையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருக்கின்றது. தொழிலாளர்கள் தொடர்பிலான சர்வதேச சட்ட நியமங்களையும் அரசு ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்று வீட்டுப் பணியாளர்களின் தொழிற்சங்கம் கூறுகின்றது.

'உள்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீட்டுவேலைத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றார்கள். அவர்களின் சம்பளம் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கென சட்ட ரீதியான குறைந்தபட்ச சம்பளச் சட்டம் இல்லாத காரணத்தினால் அவர்களின் குடும்பங்கள் இதனால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றன'என்றார் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மேனகா கந்தசாமி.

'அவர்களுக்கு நியாயம் கிடைக்கத்தக்க வகையில், வீட்டுவேலைத் தொழிலாளர்களையும் இந்தச் சட்டத்தில் உள்வாங்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்'என்றார் மேனகா கந்தசாமி.இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும் மேனகா கந்தசாமி கூறினார்.

அபிவிருத்தி பணிகளுக்காக தோட்ட நிர்வாகங்களை நம்பியிருக்க வேண்டியதில்லை

$
0
0
பிரித்தானிய கம்பனிகள் நிர்வகித்த காலம் முதல் இன்றைய கம்பனிகள் நிர்வகிக்கும் காலம் வரை மலையக பெருந்தோட்டங்களின் உள்ளக பாதைகளை அமைக்கும் பொறுப்பினை தோட்ட நிர்வாகங்களே மேற்கொண்டு வந்தன. ஆனால் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை தோட்டப்பகுதிகளில் வீதிகளை அமைக்கும் பணியை செய்கின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் திலகராஸ் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில் 

முன்பு அபிவிருத்திக்கு பொறுப்பான அரச நிறுவனங்கள் தோட்டப்பகுதிகளில் பணியாற்றுவதில்லை.  புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்பு நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு வீதிகள் கார்பட் வீதிகளாக மாற்றியமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்றார். அபிவிருத்தி பணிகளுக்கு தோட்ட நிர்வாகங்களை தங்கியிருக்கும் நிலை தற்போது இல்லை. 

பிரதேச சபைகள் சட்டத்திருத்தத்தை நாம் வேண்டி நின்றதும் அதேபோல்அரச நிதியினை பயன்படுத்தி தோட்டப்பகுதிகளுக்கு அரச சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக பிரதேச செயலகங்களை அதிகரிக்கும் யோசனையையும் முன்வைத்துள்ளோம் என்றார். மஸ்கெலிய பிரதேசமக்கள் தங்களது அரச தேவைகளுக்காக கினிகத்தேன வரை செல்வதற்கு பதிலாக அதனை நோர்வூட் நகர பகுதியில் பெற்றுக்கொள்ளக்கூடியதான வேலைகளை முன்னெடுத்து  வருகிறோம். 

ஊவா மாகாண தமிழ்க் கல்விக்கு தனியான அலகு

$
0
0
ஊவா மாகா­ணத்தில் தமிழ் கல்­விக்­கென்று தனி­யா­ன­தொரு அலகு ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். அப்­போ­துதான் தமிழ்க் கல்­வித்­து­றையில் முன்­னேற்­ற­க­ர­மான மாற்­றங்­களை எதிர்­கொள்ள முடி­யு­மென்று, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசு­கையில், “ஊவா மாகாண தமிழ்க் கல்­வித்­து­றை­யினை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில், கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை மேற்­கொண்டு, அத­ன­டிப்­ப­டையில் செயல்­பா­டு­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்டேன். கடந்த ஒரு மாத­கா­ல­மாக எடுத்த முயற்சி, தற்­போது பய­ன­ளித்­துள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் கல்­வித்­து­றைசார் சக­லரும் பங்கு கொண்­டி­ருப்­பது கண்டு பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

மாகா­ணத்தின் தமிழ் மொழி மூல­மான பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பப்­படும் கடி­தங்கள் மற்றும் சுற்­ற­றிக்­கைகள் அனைத்தும் தமிழ் மொழி­யி­லேயே அமைய வேண்­டு­மென்று, எம்மால் விடுக்­கப்­படும் கோரிக்­கை­க­ளுக்கு, தற்­கா­லிகத் தீர்­வு­களே கிடைக்­கின்­ற­தே­யன்றி, நிரந்­தரத் தீர்­வுகள் கிடைப்­ப­தில்லை. ஒரு சில கடி­தங்கள் தமிழ் மொழியில் அனுப்­பப்­பட்­டாலும், காலப் போக்கில் அது செயல்­ப­டு­வ­தில்லை.

மாகாண தமிழ்க் கல்­வியில் ஏற்­படும் பின்­ன­டைவே, ஊவா மாகாணம் நான்காம் இடத்­திற்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ற­தற்கு காரணம். தமிழ்க் கல்­வித்­து­றையும் வளர்ச்சி பெற்­றி­ருக்­கு­மே­யானால், நாட்டின் இரண்டாம் இடத்­திற்கு, ஊவா மாகாணம் வந்­தி­ருக்கும் என்றார்.

அடுத்து, ஊவா மாகாண சபை உறுப்­பி­னரும், ஊவா மாகாண தமிழ் கல்­வித்­து­றைக்கு பொறுப்­பா­ள­ரு­மான ஆ.கணே­ச­மூர்த்தி தம­து­ரையில், பல்­க­லைக்­க­ழகம் பிர­வே­சிக்கும் மாணவர் தொகையில் அதி­க­ரிப்பு இடம்­பெ­ற­வேண்­டி­யது அதி­முக்­கி­ய­மாகும். அந்­நி­லை­யினை ஏற்­ப­டுத்த அதிபர், ஆசி­ரி­யர்கள் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புக்­க­ளுடன் செயல்­படல் வேண்டும்.

தமிழ்­மொழி மூலம் கற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தொழில்­நுட்பக் கல்­லூ­ரி­யொன்று அமைய வேண்­டி­யதும் அவசியமாகும். பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, இடைவிலகலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அத்துடன், முன்பள்ளிகளின் தரம் அதிகரிக்கப்படல் வேண்டும் என்றார்.

இந்திய வம்சாவளியினர் இந்நாட்டின் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்

$
0
0
இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் தனி தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமனி நுவரெலியாவில் இடம்பெற்ற அரசியல் யாப்பு சீர்திருத்த ஆணைக்குழு அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் இலங்கை பாராளுமன்றம் இரண்டு சபைகளை கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டாவது சபையில் அந்தந்த சமூகங்கள் சம்பந்தமான விடயங்கள் வரும் பொழுது அந்தந்த சமூக அங்கத்தினர்களின் அனுமதியுனேயே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். 

பிரஜாவுரிமை சட்டத்தில் இவ்வாறு இருந்திருக்குமானால் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்திருக்க முடியாது எங்களுக்கென்று ஒரு மாகாணம் அல்லது மாநில அலகு அவசியமாகின்றது. 

இந்த முறைமை பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் இடத்தில் மாத்திரமல்லாமல் வவுனியா அல்லது சிலாபம் அக்குரஸ்ஸ, தெனியாய போன்ற ஏனைய பகுதிகளையும் உள்­ளடக்கியதாக அமைய வேண்டும். மலையக மக்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் அவர்களும் அந்த மாநில அமைப்பில் பங்குகொள்ளக் கூடியதாக ஒரு சபையை உருவாக்க வேண்டும். இலங்கை ஒரு மத சார்பற்ற நாடாகவும் பல இனங்கள், பல கலாசாரங்கள், பல சமயங்கள், பல மொழிகள் பேசுகின்ற மக்களை கொண்ட ஒரு நாடாக இருக்க வேண்டும். தமிழிலே இலங்கை குடியரசு நாடு என்று குறிப்பிட வேண்டும் என்றார்.

இலங்கையில் வாழும் மக்களாக சிங்களவர்கள், இலங்கைத்தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், முஸ்லீம்கள், மலேயர்கள், பறங்கியர்கள் மற்றும் ஏனைய இனக்குழுக்களையும் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மலையக மக்களை குறிக்கும் இந்திய தமிழர் என்ற பதம் மாற்றப்பட வேண்டும். 

ஏனைய தேசிய இன மக்களோடு சமமாக மலையக மக்கள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கென தனியான பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தேர்தல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் 

கடந்த காலம் தொடக்கம் இன்றுவரை இந்திய வம்சாவளி சமூகம் பின்தங்கிய சமூகமாக வாழ்ந்து வருவதால் இவர்களுக்கென விசேட ஏற்பாடு கொண்டுவரப்படல் வேண்டும் நீதி, நிர்வாக சம்பந்தமான பதவிகளுக்கு ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படுவதை போல மலையக மக்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என்றார். 

இந்திய அரசிலமைப்பு அரசியல் சட்;டத்தில்; 25,26,30,40 ஆகிய சரத்துக்களில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள், இலங்கை அரசியல் யாப்பு சட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார் புத்திரசிகாமணி

Viewing all 376 articles
Browse latest View live