Quantcast
Channel: Kumurum MALAYAKAM
Viewing all 376 articles
Browse latest View live

சீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

$
0
0
மலையகத்தில் மீண்டும் நிலவும் சீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய பலத்த காற்று, அதன் விளைவாக ஏற்படும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில், மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அப்பகுதியிலுள்ள மின் கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் (09) இரவு முதல், அப்பகுதிக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிப்பின் காரணமாக அக்கரப்பத்தனை, டயகம, மன்றாசி, ஹோல்புறுக், நாகசேனை, லிந்துலை, மெராயா ஆகிய பகுதி மக்கள், பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதோடு, வர்த்தக நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த ஊட்டுவள்ளி தோட்டப்பகுதியில் வீசிய கடும் காற்றால், வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.


இதேவேளை, நுவரெலியா கந்தப்பளையை அண்மித்த, ஹைபொரஸ்ட், பிரம்லி, லொரிஸ்டன், அல்மா கிரேமன், சீட்டன், குருந்தோயா உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட தோட்டப்பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக வீசிய கடும் காற்றால், மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
இதனால் கடந்த 4ஆம் திகதி முதல், அந்தப் பிரதேசங்களில் மின்விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளதென, பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டிக்கோயா பகுதியில் விசிய கடும் காற்றின் காரணமாக, ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா பகுதியில், பாரிய மரம் ஒன்று நேற்று (10) முறிந்து விழுந்ததில் போக்குவரத்துத் தடைப்பட்டிருந்ததென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
அத்துடன், மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்துள்ளமையால், டிக்கோயா பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளதென அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால், சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை, தொடர்ந்து அமுலிலிருப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில், இந்த அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருப்பதாக, நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதேவேளை, மலையகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால், சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும், லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகளும், கேன்னியோன் நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் நேற்றுத் திறக்கப்பட்டன. இதேவேளை, நோட்டன் பிரிஜ் விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் நேற்று திறக்கப்பட்டன. காசல்ரீ மற்றும் மௌசாகலை நீர்த்தேக்கமும், வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளதெனத் தெரிவிக்கப்படட்டுள்ளது.
கடும் மழை காரணமாக ஹட்டன், வட்டவல பகுதியில் தாழ் நிலப் பிரதேசங்களில் அமைந்துள்ள வீடுகள் பல, வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை ஹட்டன் டன்பார் பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், அந்த வீடு முழுமையாகப் பாதிப்படைந்துள்ளது.
நன்றி- தமிழ் மிரர்

தொழிலாளர் குடியிருப்பு தீயில் எரிந்தது

$
0
0
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் இன்று (13) காலை 09.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 (லயன் தொகுதியில்)தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்த வீடுகளில் குடியிருந்த 12 குடும்பங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 

எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீயில் சிக்காமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. 

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. 

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இரத்தினபுரியில் மண்சரிவு அபாயத்தில் கலபட தமிழ் வித்தியாலயம்

$
0
0
இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழையின் காரணமாக கலபட தமிழ் வித்தியாலம் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் தினேஸ் தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி கலபட பிரதான வீதியில் இருந்து 300 மீற்றர்  உயரத்தில்  அமைந்துள்ள  கலபட தமிழ் வித்தியாலய சுவர்கள் வெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு பாடசாலைக்கருகில் இருக்கும் மண் திட்டுக்கள் தொடர்ந்து இடிந்து வருவதாகவும் தெரிவித்தார். 

மேற்படி பாடசாலையில் முதலாம்; வகுப்பு தொடக்கம் ஒன்பதாம் வகுப்புவரை 162 பாடசாலை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு அதிபர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

மேற்படி பாடசாலையில்  எந்த நேரத்திலும் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மழை காலங்களில் பாடசாலையை நடாத்த முடியாத சூழ்நிலையால் மழை காலங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையும் தவிர்த்து வருகின்றார்கள்.

சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் பாடசாலை அமைப்பதற்கு பாதுகாப்பான இடத்தில் காணி கிடைக்காத காரணத்தால் மேற்படி பாடசாலையை அமைப்பதற்கு அப்புகஸ்த்தன்ன தோட்ட கம்பனிக்கு சொந்தமான கலபட தோட்டப் பிரிவில் தோட்ட கம்பனி காணி வழங்கப்பட்டிருந்தது. எனினும் M.B.R.O பரிசோதனையில் அந்த காணியில் பாடசாலை அமைப்பதற்கு தகுதியற்றது என தெரிவிக்கப்படுகிறது.

எனவே மேற்படி பாடசாலை அமைப்பதற்கு தேவையான காணியை பெற்றுதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் மேலும்  தெரிவித்தார்.

சுகாதாரத் துறை தேசிய மயமாக வேண்டும்

$
0
0
பெருந்தோட்ட மக்களின் சுகாதாரத்துறையை மேம்படுத்த வேண்டுமெனின், பெருந்தோட்டப்பகுதி கல்வி முறை தேசிய மயமாக்கப்பட்டதைப் போன்று, சுகாதாரத்துறையும் தேசிய மயமாக்கப்பட வேண்டுமென கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.பி.சிவபிரகாசம் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, பெருந்தோட்டத் துறையின் தரக்குறைவான சுகாதார நிலை, காலனித்துவ யுகம் தொடக்கம், தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டது வரை முன்னேற்றகரமில்லாத  நிலைமையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக, பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை, பெருந்தோட்ட மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர்.

தேசிய மயமாக்கப்பட்ட பெருந்தோட்டக் கல்வித் துறையைப் போன்று, பெருந்தோட்டத் துறையின் மருத்துவ சுகாதாரத்துறையையும் தேசிய நீரோட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு, நீண்ட காலமாக சுகாதாரத் துறையில் புறம் தள்ளப்பட்டுள்ள பெருந்தோட்டச் சமூகத்தினர்  எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படல் வேண்டும். 

நாட்டில் தேசிய சுகாதார சேவையிலிருந்து புறம் தள்ளப்பட்டுள்ள இச்சமூகம் இதுவரை காலமும் தோட்டப்பகுதிகளை நிர்வகிக்கும் கம்பனிகள, தனியார் தோட்ட நிறுவனங்கள், அரச தோட்ட நிர்வாகிகள், அபிவிருத்திச் சபை போன்றவற்றின்  ஊடாக முன்னெடுக்கப்படும் சுகாதாரத்துறை தரம் குறைவானவை. 

கடந்த கால அரசாங்கங்கள் பெருந்தோட்டச் சமூகத்தினரின் அடிப்படை வசதிகளை உயர்த்துவதற்காக முயற்சிகளை கொண்டிருந்தாலும், அது முழுமையடையவில்லை. 

Article 0

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக சர்வதேசதொழில் ஸ்தாபனம், மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடிவு

$
0
0
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நலன் சார்பில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் குறித்து, சர்வதேச தொழில் ஸ்தாபனம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடுசெய்ய உத்தேசித்துள்ளதாக, மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான இ.தம்பையா பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.   

அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் 2016ம் ஆண்டு, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு என்பன தொழிலாளர்களுக்கு பாரிய அநீதியை இழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

2016ம் ஆண்டு செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 15ம் திகதியோடு முடிவடைகின்ற நிலையில் புதிதாக மேற்கொள்ளப்படுகின்ற கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது தொழிலாளர்களுக்கான நிலுவை தொகை, தொழிலாளர் நலன் சார்ந்த விடயங்களை பெற்றுக்கொடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளமை தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என்றார்.

எனவே 2003ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அடிப்படைக் கூட்டு ஒப்பந்தத்திலும், உரிய திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் சட்டத்தரணி இ.தம்பையா வலியுறுத்தினார்.  

புற்று நோய் செல்களை அழிக்க தேயிலை சாறு உதவும்

$
0
0
தேயிலை இலை சாற்றின் துணையுடன் பெறப்பட்ட மிகச்சிறிய நானோ அளவிலான "குவாண்டம் துகள்கள்" (Quantum Dots) நுரையீரல் புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் உடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரித்தானியாவின் சுவான்சி பல்கலைக் கழகமும் (Swansea University), இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் இணைந்து "குவாண்டம் துகள்"களைக் கொண்டு புற்று நோய் செல்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்று மேற்கொண்ட ஆய்வில், குவாண்டம் துகள்கள் புற்று நோய் செல்களை அழிக்கும் திறனையும் கூடுதலாகக் கொண்டிருக்கிறது என்று தற்செயலாக கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, தேயிலை சாற்றினை பரப்பு மாற்றியாக (surfactant) பயன்படுத்தி பெறப்பட்ட காட்மியம் சல்பைடு குவாண்டம் துகள்கள் புற்று நோய் கிருமிகளை 80 சதவிகிதம் அழிக்கவல்லது என்ற ஆச்சரியமூட்டும் முடிவுகளை ஆய்வக அளவில் கண்டுபிடித்துள்ளனர். அதே நேரம், இந்த குவாண்டம் துகள்களை மேலும் முறையாக அடுத்த பல நிலைகளில் ஆய்வு செய்து, மேம்படுத்தி மனிதர்களின் சிகிசைக்கு பயன்படுத்துவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று இந்த ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது.
இவ்வாராய்ச்சிக் குழுவில் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள கே. எஸ். ரெங்கசாமி நுட்பக் கல்லூரியின் உயிரி நுட்பத் துறை மற்றும் பாரதியார் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையில் உள்ள ஆய்வாளர்களும் பங்கு பெற்றுள்ளனர்.

"தேயிலை இலைகளின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை மூன்றில் ஒரு பங்கு அவை தேநீர் அருந்தும் சுவைக்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதால் அவை பெரும்பாலும் குப்பைகளாக வீணாகிறது. இவ்வாறு வீணாகும் தேயிலை இலைகளை பக்க விளைவுகளற்ற, பரப்பு மாற்றிகளாக குவாண்டம் துகள்கள் தயாரிப்பில் பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த குவாண்டம் துகள்களின் தயாரிப்பு விலையினை பன்மடங்கு குறைக்க முடியும்"என்று இந்த ஆராய்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து தெரிவிக்கிறார்.

"தற்போது வர்த்தக சந்தையில் குவாண்டம் துகள்களின விலை ஒரு மில்லி கிராம் அளவானது 250 ல் இருந்து 500 பவுண்டு (1 பவுண்டு~90 ரூபாய்) வரை விற்கப்படுகிறது. ஆனால், தேயிலை இலைச் சாற்றின் துணையுடன் தயாரிக்கபப்ட்ட குவாண்டம் துகளானது மில்லிகிராம் ஒன்றிற்கு 10 பவுண்டுகள் மட்டுமே உற்பத்தி செலவாகும். அத்தோடு இவை நல்ல ஆரோக்கியமான செல்களை அழிக்காமல், புற்று நோய் செல்களை மட்டும் தெரிவு செய்து குவாண்டம் துகள்கள் துணையுடன் அழிக்க முடியும்"என முனைவர் சுதாகர் கூறுகிறார்.

மேலும் இக்குவாண்டம் துகள்கள் அதிக ஒளி உமிழ்வு திறன் (florescence) கொண்டவையாக இருப்பதால் இவற்றின் துணையுடன் புற்று நோய் கிருமிகளை மிக எளிதாக அடையாளம் காண இயலும் என இக்குழு தெரிவிக்கிறது.

இவ்வாராய்ச்சியில் மற்றுமொறு குறிப்பிட்டத்தக்க கண்டுபிடிப்பானது புற்று நோய் செல்களின் சுவற்றில் உள்ள துளைகள் (nanopores) வாயிலாக குவாண்டம் துகள்கள் மிக எளிதாக ஊடுருவும் திறனுடையது என்று நிரூபித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது குவாண்டம் துகள்களைக் கொண்டு புற்று நோய் கிருமிகளை அழிக்கும் ஆராய்ச்சியினை அடுத்த நிலைக்கும் எடுத்துச் செல்லும் என இக்குழு நம்புகிறது.

தேயிலை இலையில் உள்ள பாலிபீனால், அமினோ அமிலம், விட்டமின்கள், மற்றும் ஆக்சிஜனேற்றம் செய்யும் மூலக்கூறுகள் புற்று நோய் செல்கள் தீவிரமாக பரவுவதற்கு முக்கிய காரணமான டி.என்.ஏ தகவல்களை பலபடியாக்கம் செய்ய விடாமல் அபாப்டாசிஸ் (apoptosis) என்னும் நிகழ்வின் மூலம் தடுத்து அழிக்கிறது.

வேல்ஸ் புற்று நோய் நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு பிரிவின் அறிக்கைப்படி நுரையீரல் புற்று நோய் என்பது வேல்ஸ் மற்றும் உலக அளவில் அதிக அளவில் காணப்படும் நான்கு வகை புற்று நோய்களில் ஒன்றாகும்.

ஒவ்வொரு வருடமும், வேல்ஸ் பகுதியில் குடல் மற்றும் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களை காட்டிலும் நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களே அதிகம். குறிப்பாக, நுரையீரல் புற்று நோய் செல் தாக்கம் கண்டறியப்பட்டவர்களில் எண்ணிக்கையில் பாதி பேரை மட்டுமே காப்பாற்ற முடிகிறது. மீதம் உள்ளவர்களின் 6.5 சதவிகிதத்தினர் மட்டுமே அடுத்த ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் உயிர் வாழ்கின்றனர்.

ஒரு சில வருடங்களில் மேலதிக ஆராய்ச்சி மூலம் குவாண்டம் துகள்களின் துணையுடன் நுரையீரல் புற்று நோய் செல்களை அழித்து இறப்பில் இருந்து மனிதர்களை காக்க முடியும் என முனைவர் சுதாகர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இவ்வாரய்ச்சியினை கீழ்கண்ட பணிகள் மூலம் அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்லும் பணியில் இக்குழு ஈடுபட்டுள்ளது.

    மிகக்குறைந்த அளவில் இருந்து குவாண்டம் துகள்களை அதிக அளவில் தயாரிக்கும் நோக்கில் "குவாண்டம் துகள் தொழிற்சாலை"யினை நிறுவுவது.

    ஆய்வக நிலையில் சோதனை தட்டில் புற்று நோய் செல்களை அழிப்பதைப் போலவே மனித உடலினுள் புற்று நோய் செல்களை மட்டும் தேடிக் கண்டறிந்து அழிக்கும் திறனையுடைய தனித்த நொதிகளை தெரிவு செய்தல்.
மேற்ச் சொன்ன பணிகளில் இருந்து ஆக்கப்பூர்வமான ஆய்வு முடிவுகள் கிடைக்குமானால் மருத்துவ சோதனைகள் சார்ந்த ஆய்வு நிலைக்கு இரண்டு வருடங்களுக்குள் இப்பணியினை எடுத்துச் செல்ல முடியும். இவற்றின் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் பயன்படும்படியான பரந்து பட்ட மருத்துவ சிகிச்சைக்கு குவாண்டம் துகள்களை கொண்டு வர இயலும்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்துவின் ஆராய்ச்சிக் குழுவானது தேயிலை இலைச்சாற்றின் துணையுடன் தயாரிக்கப்பட்ட குவாண்டம் துகள்களைக் கொண்டு நீர் மாசுபாட்டினை சுத்திகரித்தல், சூரிய மின்கலங்கள் வடிவமைத்தல், அறுவைச் சிகிச்சை அரங்குகளுக்கு தேவையான நுண்ணுயிர் எதிர்ப்பு பூச்சுகளை தயாரித்தல், சூரிய ஒளியில் இருந்து முகத்தினை பாதுகாக்கும் முகப்பூச் சினை தயாரித்தல் என்று பல நிலைகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
பி.பி.சி

எல்கடுவ பெருந்தோட்ட யாக்கத்தின் மீது கோப் குழு குற்றச்சாட்டு

$
0
0
மாத்தளை - எல்கடுவ பெருந்தோட்ட யாக்கத்தால் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் குறித்து பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (16) எல்கடுவ பெருந்தோட்ட யாக்கத்துக்குச் சொந்தமான பண்டரபொல தேயிலைத் தொழிற்சாலை, ரத்துவத்த ரோசா பளிங்குக் கற்கள் ஒப்பந்தம், செம்பவுத்த  சுற்றுலா மத்திய நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு கோப் குழுவினர் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே கோப் குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பண்டரபொல தேயிலைத் தொழிற்சாலையானது தகுந்த முகாமைத்துவம் இன்றி நடத்தப்பட்டதால் அது தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், ரத்வத்தை ரோசா பளிங்குக் கற்கள்  ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதுடன், செம்புவத்தை சுற்றுலா மத்திய நிலையத்தின் டிக்கட் விநியோகத்தில் மோசடி​கள் இடம்பெறுகின்றமை கண்காணிப்பு விஜயத்தின் போது உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெருந்தோட்ட யாக்கமானது அரசாங்கத்துக்கு சொந்தமானதொன்று என்பதுடன், பொது வியாபார செயற்குழுவின் கீழ் கணக்காய்வாளரின் கணக்காய்வுக்கு உட்பட்ட நிறுவனமாக 2016ஆம் ஆண்டு குறித்த நிறுவனம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டு பல பரிந்துரைகள் வழங்கப்பட்ட நிலையில், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், மீண்டும் அதன் பணிப்பாளர் சபை இந்த மாதம் 20ஆம் திகதி  கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
கோப் குழு நாடாளுமன்றுக்குள் இயங்கி வந்தாலும், அது புத்தகம், காகிதங்களில் வெளிவரும் காரணங்களை மையப்படுத்தி பரிந்துரைகளை முன்வைக்கும் நிறுவனம் இல்லையென்றும்,கணக்காய்வு சட்டமூலத்தில் கிடைக்கப்பெற்றுள்ள அதிகாரங்களுக்கு அமைய, அதன் அதிகாரிகளுடன் எந்தவொரு இடத்துக்கும் சென்று பரிசோதனைகளை செய்வதாகவும், அரச சொத்துக்களை நிர்வாகம் செய்யும் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவது சிறந்ததென ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

நன்றி- தமிழ் மிரர்


வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பள அதிகரிப்பு வேண்டும்

$
0
0
வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ள மலையகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சுப்பிரமணியம், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முன்னணியின் உத்தியோகத்தர்களுக்கான கூட்டம், 09-08-2018 ஹட்டனிலுள்ள முன்னணியின் காரியாலத்தில் இடம்பெற்ற போது சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பது  குறித்து தெரிவித்த சுப்பிரமணியம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, வாழ்க்கைப் புள்ளிச் செலவு நிறுத்தப்படாமல் இருந்திருந்தால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,500 ரூபாய்க்கு மேல் இருந்திருக்கும். 

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் கம்பனிகளும், வாழ்க்கைச் செலவு முறையை இல்லாதொலித்ததனால், தொழிலாளர்கள் தாம் பெற வேண்டிய வேண்டிய முழுமையான, நியாயமான சம்பளத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் பல்வேறு வகையிலும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் செலவு குறைக்கப்பட்டாலும் கூட, கம்பனிகள் நட்டத்தில் இயங்கி வருவதாகவே, கூட்டு ஒப்பந்த பேச்சுக் காலத்தில் தெரிவிக்கப்படுகிறது இவ்விடயத்தில், அரசாங்கமும் பாராமுகமாகவே செயற்படுகின்றது என்றார்.

தேயிலையின் உற்பத்தியின் விலை உயர்ந்துக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், கணிசமான அளவு சம்பள உயர்வை மக்கள் எதிர்பார்ப்பதாகவும்,  கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இது குறித்து கவனம செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகப்படல் வேண்டும்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?

$
0
0
தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கை ரூபாயில் சராசரியாக நாளொன்றுக்கு 500 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மிகவும் குறைவு என்பதால், தோட்டத் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் பின்தங்கியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்தில், தேயிலை, ரப்பர் தொழில் அதிக வலு சேர்த்துள்ளது. அதிகளவிலான அந்நியச்செலாவணியையும் பெற்றுத் தருகிறது.

நிறுவனங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் இந்த சம்பளத் தொகைத் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதியன்று, தற்போது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் கலாவதியாகிறது. ஒவ்வொரு முறை கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடும் காலப்பகுதி வரும் போதும் தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மலையக அரசியல் கட்சிகளின் கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
யார் இந்த மலையகத் தமிழர்கள்?

1820 - 1840 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில் சாதிக்கொடுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. பலர் பட்டினியால் செத்து மடிந்தனர். இச்சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், அங்குவாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலாளர்களாக கண்டி சீமைக்கு (இலங்கைக்கு) அழைத்துவந்தனர்.

1815ஆம் ஆண்டு கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது. 1820 ஆம் ஆண்டில் கோப்பி பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய பேராதனை பூங்கா அமைந்துள்ள பகுதியிலேயே முதன்முதலாக கோப்பி (காஃபி) பயிரிடப்பட்டது. பின்னர் அது கம்பளை வரை விரிவுபடுத்தப்பட்டது.

1867இல் ஒருவகையான நோய்காரணமாக கோப்பி பயிர்செய்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் நூல் கந்துர எனும் இடத்தில் தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர்ச் செய்கையை (தேயிலை, ரப்பர்) மேற்கொள்ள மனித வளம் கிடைக்காததால், தென் இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.
வரும் வழியும், வந்து குடியேறிய பின்னரும் அவர்கள் அதிகமான இன்னல்களை எதிர்கொண்டனர். ஆதிலெட்சுமி என்ற கப்பல் கடலில் மூழ்கியதால் 120 பேர் செத்துமடிந்தனர் என்ற வரலாறும் இருக்கின்றது.

இவ்வாறு வலிசுமந்த பயணம் மேற்கொண்டவர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் - மலையகத் தமிழர் என்றும், இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர்.

( மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் பெரும்பாலான மலையகத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட தமிழர்களுடன், தெலுங்கர், மலையாளிகளும் தொழில் நிமித்தம் இங்குவந்தனர்)

காடுமேடாகவும், கல்லுமுல்லாகவும் காட்சியளித்த மலைநாட்டை - தமது கடின உழைப்பால் எழில்கொஞ்சும் பூமியாக மாற்றியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தையும் தோளில் சுமந்தனர். ஆனாலும், அவர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகளிலேயே பல தசாப்தங்களை கடந்தனர். இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் இந்நிலைமை முழுமையாக மாறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

நாடற்றவர்களான மலையகத் தமிழர்

1931ஆம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947 - 1948 களில் கொண்டுவரப்பட்ட இந்திய - பாகிஸ்தானிய ஒப்பந்தம், சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், பிரஜாவுரிமைச் சட்டங்களினால் பறிக்கப்பட்டது. இதன்பின்னர் 3 தசாதப்தங்களுக்கு மேலாக நாடற்றவர்களாகவே அவர்கள் வாழ்ந்தனர்.

இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு வெள்ளையர்கள் வெளியேறிய பின்னர், சிங்களத்தேசிய வாதிகள், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களது நெருக்குதல்களினால் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இச்சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு ஒருவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது.
மலையகத் தமிழர்களில் பலர் தமக்கு முன் இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இதனால் 7 லட்சம் வரையான மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஏற்றப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது. அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும், இலங்கையின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இடையே 1964ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி (சிறிமா - சாஸ்திரி) ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இந்த ஒப்பந்தத்தால் 150,000 பேர் விடுபட்டுப் போயினர். 1967ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தால் இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர் என மூன்றாக பிரிக்கப்பட்டனர்.

போராட்டமும், அரசியல் அங்கீகாரமும்

கவ்வாத்து வெட்டப்படுவதுபோல் இலங்கையின் வரலாற்றிலிருந்து வெட்டப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட - தோட்டப் புறங்களில் வாழ்ந்த இந்திய சமுதாயத்தினருக்கு குடியுரிமை, வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

1952ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய மூன்று மாத சத்தியாக்கிரக போராட்டம் அன்றிருந்த அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. 1958ஆம் குடியுரிமை சட்டத்தின் பிரகாரம் பிரஜாவுரிமை பெற்றவர்களைத் தவிர ஏனைய "நாடற்றவர்களாக"கருதப்பட்ட இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை வழங்கும் விசேஷ சட்டம் 1988 நவம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட மூலமாகவே வழங்கப்பட்டது. இதனால் நாற்பது வருடங்களாக அரசியல் இழுபறிகளால் தீர்வு காணாத பெரும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது. இந்திய சமுதாயத்தினர் "நாடற்றவர்"என்ற பதத்தில் இருந்து விடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து 1989 ஏப்ரல் 26ம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச்சட்டம்"புதிதாக பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரை தம்மை வாக்காளர்களாக பதிவு செய்ய கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்த சட்டத்தின் பிரகாரமே இந்திய சமுதாயத்தினர் - விசேடமாக தோட்டப்புற மக்கள் இன்று வாக்குரிமை பெற்று ஏனைய சமூகத்தோடு அரசியல் நீரோட்டத்தில் சங்கமித்துள்ளனர். இதுவே இம்மக்களின் பிரதிநிதிகள் இன்று பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும், பிரதேச சபைகளிலும் ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் அரசியல் பிரவேசம் செய்ய வழிசமைத்துக்கொடுத்தது.

வாழ்க்கைத் தரத்தில் பின்தங்கிய மலையக சமூகம்

1970கள் வரை இலங்கையின் பொருளாதாரமானது, பெருந்தோட்டப் பொருளாதாரத்திலேயே தங்கி இருந்தது. நேர,காலம் பாராது கடின உழைப்பின்மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் உரமூட்டினார்கள். இருந்தும் கைக்கூலிகள் என்ற கண்ணோட்டம் மாறவில்லை. நாட்சம்பளம் பெறும்தொழிலாளர்களாகவே நாட்களை நகர்த்துகின்றனர். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டன.

மலையக மக்களின் வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய பொது மக்களது வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடுகையில் கீழ் மட்டத்திலேயே இருந்தது. இந்நிலைமை இன்று முழுமையாக மாறிவிட்டது என பெருமிதம்கொள்ளமுடியாது. ஒரு சில பகுதிகளில் அந்த அவலக்காட்சிகள் அப்படியே தொடரத்தான்செய்கின்றன என்று மலையக மக்கள் சார்பாக குரல்கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் கரிசணை

மலையக மக்களின் நிலையைக் கருத்திக் கொண்டு, வீட்டுத்திட்டமொன்றின் ஊடாக நேசக்கரம் நீட்டியது இந்திய அரசு. அந்தவீட்டுத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மலையக மக்களின் சுகாதாரத்துறை, கல்வித்துறை என்பவற்றை மேம்படுத்துவதிலும் அந்நாட்டு அரசு அக்கறைக் கொண்டுள்ளது.
இதற்காக பல மருத்துவமனைகளை அமைக்க இந்திய அரசாங்கம் நிதியுதவிகளைச் செய்துள்ளதுடன், மலையக மாணவர்களுக்கான புலமைப்பரீசில் உதவிகயையும் வழங்கிவருகின்றது.

மாறிவரும் மலையக சமூகம்

பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மாறிவரும் மலையக சமூகம் இன்று அனைத்துத் துறைகளிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சட்டத்தரணிகள் முதல் தலைநகரில் பெரும் வர்த்தகர்கள் வரை மலையகத் தமிழ்ச் சமூகத்தில் இருந்து இணைந்து வருகின்றனர். கல்வியிலும் மலையக சமூகம் முன்னேறி வருகின்றது. அண்மைய ஆண்டு புள்ளிவிபரங்களின்படி பல்கலைக்கழக பிரவேசமும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன.
வளர்ந்து வரும் சமூகமாக மலையக சமூகம் பார்க்கப்பட்டாலும், கொழுந்து பறிக்கும், இறப்பர் வெட்டும் தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். இவரகளின் அடிப்படைச் சம்பளம் நாளொன்றுக்கு இலங்கை ரூபாவில் 500ஆகவே இருக்கிறது. வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைந்திருப்பதால் இன்றும் சம்பள உயர்வைக் கோரிய ஆர்ப்பாட்டங்கள் மலையகத்தில் நடந்து வருகின்றன.

நன்றி- பி.பி.சி தமிழ்

வைத்தியசாலையில் ஏற்றப்பட்ட ஊசி மருந்தினால் பார்வையை இழந்த கண் நோயாளர்கள்

$
0
0
அண்மையில் நுவரெலியா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை கிளினிக்கில் 55 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். நோயாளர்களுக்கு ஏற்றப்பட்ட ஊசியினால் நோயாளர்கள் 23 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நோயாளர்கள் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பார்வைக் குறைபாட்டுக்கு, நீரிழிவு நோய், உயர்குருதி அழுத்தம் உள்ளிட்ட நோய்களும் மிக முக்கிய காரணம் என்பதால், பார்வைக் குறைபாடுகளுக்காக வரும் நோயாளிகளுக்கு, பார்வைக் குறைபாட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக, நீரிழிவு நோய், உயர்குருதி அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கே முதலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கமைவாகவே, நோயாளர்களுக்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஊசி ஏற்றப்பட்டு பின்னர், மேற்படி 23 பேரும் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளுக்குத் அனுப்பப்பட்ட நோயாளர்கள், பார்வையை முற்றாக இழந்துள்ளதுடன், அவர்களது கண்களிலிருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் உறவினர்கள் உதவியுடன் மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வைத்தியர்களின் நேரடி கண்காணிப்பில் கடந்த ஒருவார காலமாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து  இவர்களுக்கு ஓரளவு கண்பார்வை திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அநுர ஜயசேகர தெரிவித்துள்ளார். 

கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் நல குறைபாடு தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நியூயோர்க்கிலிருந்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சுகாதார பணிப்பாளர்நாயகம் தெரிவிக்கையில் இதுபோன்ற ஊசி வேறு வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்பட்டபோதும் நோயாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 

நியாயமான சம்பளம் இன்றேல் மலையகம் தழுவிய போராட்டம்

$
0
0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அத்துடன் அன்றைய தினம் நியாயமான சம்பள உயர்வொன்றுக்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லை யென்றால் மலையகம் தழுவிய மாபெரும் தொழிலாளர் போராட்டம் இடம்பெறுமென இ.தே.தோ.தொ.சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான  வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். சம்பள உயர்வு தொடர்பில் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்தநிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையை அரசியலாக்காமல் அனைத்து தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இதற்கு பூரண ஆதர வழங்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்தும் முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட கம்பனிகளும் தொழிலாளரை ஏமாற்ற முடியாதெனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள உயர்வு அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் இராஜ கிரியவிலுள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்தில் விசேட செய்தியாளர் மாநாடொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இம் மாநாட்டில் ஊவா மாகாண சபை உறுப்பினர் ருத்ரதீபன் மேற்படி சங்கத்தின் இணைப்பாளர் விஜயகுமாரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த வடிவேல் சுரேஸ் எம்.பி.,
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான தொழிற்சங்க மட்ட பேச்சுவார்த்தைகள் பல இடம்பெற்ற நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒரு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தையின்போது 10 வீத சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான சம்மேளனத்தின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட நிலையில் நாம் அதை ஏற்கவில்லை.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அது கைகூடவில்லை. இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இ.தொ.கா, இ.தே.தோ.தொ.ச, தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துடனும் செயற்படுகின்றன. இதன்மூலம் 1000 ரூபாவுக்கு மேற்பட்ட சம்பள உயர்வொன்றை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.
இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவுறுவதால் 14 ஆம் திகதி சம்பள உயர்வு தொடர்பில் முடிவொன்று எட்டப்படாதவிடத்து அதற்கு பின்வரும் காலங்களுக்கான நிலுவையையும் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2020 ஆம் ஆண்டுவரை புதிய கூட்டு ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கும். எனினும் இந்த இடைப்பட்ட காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதோடு வாழ்க்கைச் செலவு பெருமளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. இதனைக் கருத்திற்கொண்டே சம்பள உயர்வின் தொகை நிர்ணயிக்கப்படும்.
அதுதொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் ஒரு முடிவை எடுத்திருந்தாலும் 14 ஆம் திகதிக்குப்பின்னரே கூட்டாக அந்த முடிவை அறிவிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நன்றி - தினகரன்

தொழிற்சங்க வரலாற்றில் அழிக்க முடியாத பெயர் ஏ. அஸீஸ்

$
0
0
சுதந்திரத்துக்கு முன்னரும் அதற்கு பின்னருமான இலங்கையின் அரசியல் மற்றும் தொழிற்சங்க வரலாற்றினை பின்னோக்கிப் பார்க்கின்ற போது அந்த போராட்ட வரலாற்றுப் பதிவில் ஏ. அஸீஸ் என்ற நாமம் தனித்துவம் மிக்கதாகவே காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டுத்துக்காக முதலில் தலைமை ஏற்ற ஒரு தலைவராக போற்றப்படுகின்ற அஸீஸ் இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்த வர்த்தக குடும்பத்தில் பிறந்தவராவார்.
இலங்கை தோட்ட தொழிலாளர் போராட்ட வரலாறு வெறுமனே இங்கு வாழ்ந்த இந்திய தோட்ட தொழிலாளரை மட்டும் வைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் இந்த வரலாற்றின் ஆரம்பமே ஒரு சிங்கள தோட்டத் தொழிலாளியின் உயிர்த்தியாகத்துடனேயே ஆரம்பமாகின்றது. அக்கரப்பத்தனையில் பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பலியான ஏப்ரகாம் சிஞ்ஞோ என்ற சிங்கள தோட்டத் தொழிலாளியே தொழிற்சங்க வரலாற்றின் ஆரம்பமெனலாம்.
அந்த மரணம் காரணமாக எழுந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ஏ. அஸீஸ் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அணிதிரட்டி ஏப்ரகாம் சிஞ்ஞோவின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று உரிமைப்போராட்டுத்துக்கான ஆரம்பப் புள்ளியை இட்டார்.
1943 ஆம் ஆண்டில் ஒரு நாள் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பிரதிவாதியாக நிறுத்தப்பட்ட அஸீஸ் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் உரையாற்றியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டார். என்றாலும் நீதிமன்றத்தின் ஜுரி சபை அவர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியது. இந்த ஜுரி சபையின் முடிவை பிரிடிஷ் பிரஜையான நீதிபதி ஏற்றுக்கொண்டு கசப்பான மருந்தை அருந்துவது போன்று அந்த தீர்ப்பை விருப்பமின்றியே வழங்கினார்.
1959 இல் பலாங்கொடையிலுள்ள பிடியாகல தோட்டத்துக்குள் அனுமதியின்றி நுழைந்தார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது அஸீஸ் உட்பட ஏனையவர்களை இரண்டு மாதங்களுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அந்தத் தீர்ப்புக்கு எதிராக அஸீஸ் உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டு அதே தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. அஸீஸ் அதிலும் சேர்ந்து போகவில்லை அந்தத் தீர்ப்புக்கு எதிராக இங்கிலாந்தில் பிரிவுக்கவுன்ஸிலுக்கு மேல் முறையீடு செய்தார். அந்த நீதிமன்றம் அஸீஸுக்கு சார்பாக தீர்ப்பளித்தது. அன்று முதல் எந்த ஒரு தோட்டத்திற்குள்ளும் தொழிற்சங்கங்கள் நுழையக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இது அஸீஸின் போராட்டக் குணத்தின் மேன்மையை பறைசாற்றி நிற்கின்றது.
இந்தியாவின் மகாத்மா காந்தி பிறந்த போர்ப்பந்தரில் 1912 ஒக்டோபர் மாதம் 06ம் திகதி வர்த்தகர் குலாம் ஹுசையின் ரேமுக்கு மகனாகப் பிறந்தார். சொந்த ஊரில் படித்துப் பட்டம் பெற்ற அஸீஸ் இலங்கையில் தனது தந்தையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இலங்கை வந்தார். ஆனால், இங்கு வந்த அஸீஸ் வந்த நோக்கத்தை கைவிட்டுவிட்டு பாட்டாளி வர்க்கமான தோட்டத் தொழிலாள மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அஸீஸின் ஆங்கிலப் புலமையும் உறுதியான மன நிலைப்பாடும் அன்று ஏகாதிபத்திய ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக காணப்பட்டது. எதற்கும் அஞ்சாத அஸீஸ் அதே பயணத்தை முன்னெடுத்துச் சென்றார்.
1939 இல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இந்திய தொழிலாளர் சங்க கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார். அது அவரை மலையக மக்களின் மனங்களை ஈர்த்தெடுத்துக்கொண்டது. அஸீஸுடைய பணி இன, மத, மொழி கடந்த மனித நேயமிக்கதாகவே காணப்பட்டது. அவருடைய ஆற்றல் இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமல்ல ஆசிய, ஆபிரிக்க பிராந்திய மெங்கும் வியாபித்துக் காணப்பட்டது. ஒருதடவை மகாத்மா காந்தியை சந்தித்த அஸீஸ் நீண்ட நேரம் நடந்த வண்ணமே பேசிக்கொண்டிருந்தார். அப்போது மகாத்மா காந்தி அஸீஸ் அவர்களிடம் கேட்டார். இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவை தேர்ந்தெடுப்பது நல்லதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அஸீஸ் இதனை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையை புறந்தள்ளி செயற்பட முடியாது. இதனாலேயே இலங்கையினுடைய அபிப்பிராயத்தையும் எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதற்குப் பதிலளித்த அஸீஸ் பாரத நாட்டை பொறுத்த வரையில் நேருஜியை விட்டால் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இதனை இங்கு சுட்டிக்காட்டுவதற்கு காரணம் அஸீஸின் அறிவாற்றல் குறித்து மகாத்மா காந்தி எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவேயாகும்.
ஏ. அஸீஸ் தனது இறுதிக்காலம் வரை முழுக்க முழுக்க தோட்டத் தொழிலாளர் வர்க்கத்திற்கே தன்னை முழுமையாக தியாகம் செய்தார். சுதந்திர போராட்டம் நடந்த காலகட்டத்தில் இலங்கைக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அஸீஸ் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் எமது நாட்டிற்கு சுதந்திரத்தினை தாருங்கள். எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்வோம். சிங்கள மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.
இலங்கை உழைக்கும் வர்க்கத்திற்காக மே தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென்று உரத்துக் குரல் எழுப்பிய அஸீஸ் அதில் வெற்றி கண்டார். ஆசிய ஆபிரிக்க ஒத்துழைப்பு இயக்கத்தின் உபதலைவராக 1985 இல் தெரிவு செய்யப்பட்ட அஸீஸ் தனது மரணம் வரையில் அந்தப் பதவியில் நீடித்தார். 1947 மஸ்கெலியா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வகட்சி மாநாட்டில் தொடர்ச்சியாக பங்கேற்று முன்வைத்த யோசனைகள் இனவாதத்திற்கும் அடிப்படை வாதத்திற்கும் சாட்டை அடி கொடுக்கும் விதத்தில் மனிதாபிமானத்தை உயர்த்திப்பிடித்து பேசினார். இதன் காரணமாக ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகிய ஜனாதிபதிகளின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.
தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தின் சம்பளம் ஏனைய உழைக்கும் வர்க்கத்தின் சம்பளத்திற்கு சமனாக இருக்க வேண்டும் என்று அஸீஸ் வலியுறுத்தி வந்தார். தோட்ட மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வீடு, கல்வி உட்பட அனைத்து விடயங்களும் ஏனைய மக்களுக்கு உள்ளது போன்று சமனாக இருக்க வேண்டும் என்பதை அரசாங்கத்துக்கு வலியுறுத்தி வந்தார். 1970 முதல் 1977 வரை உள்ள காலப்பகுதியின் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் நியமன எம்.பியாக நியமனம் பெற்றார்.
அஸீஸ் தனது 78வது வயதில் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி காலமானார். அவருக்கு 4 பிள்ளைகள். டாக்டர் லைலா ஹஸ்வானி, டாக்டர் செய்பூன் பட்டேல், ஆகிய இரண்டு புத்திரிகளும் அஷ்ரப் அஸீஸ், அன்வர் அஸீஸ் ஆகிய இரண்டு புத்திரர்களும் உள்ளனர். தந்தை வழியில் சமூக தொழிற்சங்க பணிகளில் அஷ்ரப் அஸீஸ் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். இந்தியாவில் பிறந்து இலங்கையில் உழைக்கும் வர்க்கத்திற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திய ஏ.அஸீஸின் நாமம் சதா காலமும் நீடித்து நிலைக்கும் என்பது உறுதி.
நன்றி- தினகரன்

குட்டக் குட்டக் குனிந்தது போதும் என்ற உரத்த சிந்தனை மலையக சமூகத்தில் எழ வேண்டும்!

$
0
0
மலையகத்தின் வரலாறு இந்தியத் தமிழர்கள் ஈழமண்ணைத் தழுவியபோது ஆரம்பித்ததல்ல; அதற்கும் நூறு ஆண்டுகள் பழை மையானது. உலக காலனித்துவம் தலைவிரித்தாடியபோது கீழைத்தேய நாடுகள் அதற்கு கட்டுண்டு வாழ்ந்த காலமது. 1700 களில் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் பல்வேறு மேலைத்தேய நாடுகள் ஆபிரிக்க, இந்திய நாடுகளை கைப்பற்றிக் கொண்டு தங்கள் நாடுகளின் பொருளாதார துறையை மேம்படுத்திக் கொண்டன. இக்காலகட்டத்தில் ஆபிரிக்க நாடுகள் காலனித்துவத்தில் விடுதலை பெறவே! பிரிட்டிஷ் மாத்திரம் இந்திய, இலங்கை போன்ற நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தமது பலத்தை பிரயோகித்தன.
பூர்வீக இந்திய மக்கள் நூல் நூற்பதையும், நிலத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தையும் நம்பி வாழ்க்கை நடத்தினர். இதனை முதலில் ஊக்குவித்த பிரிட்டிஷ் அரசாங்கம் உற்பத்திகளை உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது. பிரிட்டிஷ் ஏற்றுமதியை விட இந்திய ஏற்றுமதி உலக சந்தையை ஆக்கிரமிப்பதை பார்த்த பிரிட்டிஷ் அரசு, உடனடியாக சுயதொழில் முறையை ஒடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கோரிக்கையொன்றை முன்வைத்தது. இவற்றோடு பிரிட்டிஷாரின் கைத்தொழிலை விரும்பாத மக்களாக இந்தியர்கள் இருந்தமையும் இதற்கு காரணமாகும்.
நிலத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய முறையை குறைக்க வேண்டி பிரிட்டிஷ் அரசு நிலத்தினை அடிப்படையாக கொண்ட விவசாயம் செய்பவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் தாக்குப்பிடிக்க முடியாத வரியை அறவிடவே அதிகமானோர் தன் நிலத்தினையும், பூர்வீக விவசாய முறையையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
1835- - 1840 கால கட்டங்களை நிலப்பிரபுத்துவ முறையும், ஜாதி அடிப்படையாக வர்ணாச்சிர தர்மமும் இவற்றோடு உணவுப் பஞ்சம் ஏற்பட ஆரம்பித்தது. பிரிட்டிஷார் கொண்டுவந்த வரிவிதிப்பு முறைகள் இதற்கான காரணமாகும். 1770, 1784, 1804, 1937, 1801ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்த பஞ்சத்தில் தஞ்சாவூர் மாவட்டம் நாற்பது இலட்சம் தமிழர்களை இழந்தது. இவற்றுடன் இந்தியாவில் தலைவிரித்தாடிய ஜாதி முறை, தான் விரும்பிய தொழிலை செய்யவும் வழிகொடுக்கவில்லை. இதனை பிரிட்டிஷார் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
இதே காலகட்டத்தில் ஈழத்தில் பொருளாதாரத்துறையை மேம்படுத்தவும், பெருந்தோட்டப் பொருளாதாரத்துறையை வளர்ச்சி செய்யவும் பிரிட்டிஷார் எத்தனித்தனர். பிரிட்டிஷில் உள்ள பணம் படைத்த முதலாளிகள் இலங்கையில் நிலம் மலிவாக கிடைக்கவே அதிகமானோர் இலங்கையில் முதலிடு செய்தனர்.
இதேவேளை இந்திய தமிழ் மக்கள் வறுமையில் வாடியபோது இவர்களுக்கு பல காரணங்களைக் கூறி வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஊக்குவித்தனர். 150 ரூபாய்க்கு நல்ல நிலம் கிடைத்த காலத்தில் 200 தொடக்கம் 500 ரூபாய் சம்பாதித்து வரலாம் என்றும், நல்ல உணவு. தங்குமிடம் கிடைக்கும் என்றும் இலங்கை சென்றோர் ஜாதி முறையை விரும்பாதவர்களாக இருப்பர் என்றும் பல காரணங்கள் கூறி ஏமாற்றினர் என்பதே உண்மை. உதாரணமாக கூறினால் தேயிலை மரத்திற்கு அடியில் பொன்னும், மாசியும் கிடைப்பதாக கூறினர் என்பதும் வரலாற்று உண்மையாகும். இவ்வாறு இந்தியத் தமிழர்களை கொடித்தடிமைகளாக இலங்கைக்கு கொண்டுவர முயன்றது பிரிட்டிஷ் அரசாங்கம்.
உலக சந்தையில் கோப்பி விலை முன்னிலையில் காணப்பட்டது. எனினும் ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றுவிடவே கோப்பித் தோட்டங்களில் வேலைச் செய்தோரும் அதைக் கைவிட்டனர்.
ஆனால் பிரிட்டிஷ் அரசு மட்டும் சில நாடுகளை தன் வசம் வைத்திருந்தமையால் கோப்பிப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தது. இதற்காக முதன் முறையாக இந்தியாவிலிருந்து 14 இந்தியத் தமிழர்களை வேலைக்கமர்த்தினர். இது கம்பளையில் சிங்கபிட்டிய என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு 1835- - 1840 ஆண்டுகளுக்கு இடையில் பெருந்தொகையான மக்களை கோப்பித் தோட்டங்களில் இறக்கியது பிரிட்டிஷ் அரசு. இருப்பினும் கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட ஒருவகை நோயின் காரணமாக இப் பயிர்ச் செய்கை ஆரம்பித்த அதே வேகத்தில் மண்ணைக் கௌவியது.
இவ்வாறான காலகட்டத்திலேயே 1867ஆம் ஆண்டு தெல்தோட்டை லூல்கந்துர என்ற இடத்தில் ஜேம்ஸ் டெய்லர் இலங்கையில் தேயிலையை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்தே ஈழமண்ணுக்கு பல்லாயிரம் மக்களை தோணிகளில் ஆட்டுமந்தைகளாய் கொண்டு வந்து இறக்கினர். 1827ஆம் ஆண்டு 10,000 தொழிலாளர்களும், 1877ஆம் ஆண்டுகளில் 145,000 தொழிலாளர்களும், 1947ஆம் ஆண்டு வரை எட்டு லட்சம் இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களும் இலங்கை மண்ணை வந்தடைந்தனர். இந்தியாவில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு தோணிகள் மூலம் இவர்களை கொண்டு வந்தனர். 100 பேர் வரை ஏற்றக் கூடிய தோணிகளில் 500 பேர்வரை ஏற்றி வந்தனர். இவ்வாறு வந்த பலர் தோணிகள் மூழ்கி இறந்தோரும் உளர். ஆதிலெட்சுமி என்ற கப்பல் மூழ்கி 120 பேர் வரை இறந்து போன காலகட்டமும் இதுவே.
தலைமன்னாரில் கொத்தடிமைகளாக வந்திறங்கியவர்கள் மலைகளும், பற்றை வனாந்தரமுமாக இருந்த மலைநாட்டை கால் நடையாக வந்து பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். இவ்வாறு கால்நடையாக வந்த மக்களும் கடுங்குளிர் காரணமாகவும், அதிக மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாகவும், பாம்பு, அட்டை, பூராண் போன்ற பூச்சி இனங்கள் மற்றும் விலங்குகள் காரணமாகவும் மாண்டுபோயினர். 1867ம் ஆண்டு புறப்பட்ட 639 பேரில் 186 பேர் மட்டுமே மலையகத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வந்தவர்களே இந்த மண்ணை தேயிலை வளரும் பொன் பூமியாக மாற்றினர்.
இது மட்டுமா? மலையக மக்களை தாக்கிய கொடுமைகள் முடிந்து விட வில்லை. 1948ம் ஆண்டு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கையர், 1920ம் ஆண்டு இலங்கையில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்ட வாக்குரிமையைப் பறித்துக் கொண்டனர். இதனால் எட்டு லட்சத்து ஐம்பதாயிரமாக இருந்த மலையக மக்களின் வாக்குரிமையில், 7 லட்சம் பேர் வாக்குரிமையை இழந்தனர். பிரட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 33 சதவீதமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக குறைந்தது.
அப்படியும் விட்டுவிடவில்லை. இந்த மலையகத் தமிழர்களை சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் என்றபேரில் மீண்டும் கத்தியை வீசினர். 1964ம் ஆண்டு 8 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த இந்தியத் தமிழர்களை அரைவாசியாகக் குறைக்கும் ஒப்பந்தமே இது.
வளரவளர கவ்வாத்து செய்யப்படும் தேயிலை மரங்களைப் போல இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களும் அவ்வப்போது கவ்வாத்து பண்ணப்பட்டு வந்துள்ளனர்.
கண்டி, ஹற்றன், நுவரெலியா, பதுளை, மாத்தளை, புஸல்லாவை என்று பல்வேறு பிரதேசங்களில் பரவிக் காணப்படும் பெருந்தோட்ட சமூகம் இன்றைக்கும் பாட்டாளி வர்க்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
உலகச் சந்தைகளில் அதிக இலாபத்தை ஈட்டித்தரும் இலங்கைத் தேயிலையுடன் சம்பந்தப்பட்ட மக்களின் நிலை மட்டும் மாறாதுள்ளது. எத்தனையோ அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டும் லயன் வீடுகள் மட்டும் இன்னும் மாறாமல் இருப்பது கவலைக்கிடமானதே. இவ்வாறான நிலையை மாற்றி அமைப்பது இந்தியாவின் 4000 வீடமைப்புத் திட்டாமா? இல்லை 1000 ரூபாய் சம்பளமா? எதுவாயினும் இவை மட்டும் மலையகத் தமிழர் வாழ்வை மாற்றியமைக்காது.
இலங்கை நாட்டில் ஏனைய மக்களுடன் ஒப்பிடும் போது வாழ்க்கைத்தரம் குறைந்திருக்கும் இம் மக்களின் நிலையை முழுமையாக மாற்ற வேண்டியது எல்லோரினதும் கடமையாகும்.
இது தனிபட்ட அரசாங்கத்திற்கோ அல்லது தொழிற்சங்கங்களுக்கோ உரியதல்ல. இன்றைய இளைய சமுதாயத்தினரையும் இதுசாரும். எனவே இவ்வாறு மலையக மக்களின் சமூக, பொருளாதார வாழ்வியல் உயர்த்தப்படும்போதே இவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது ஐயமில்லை.
தயா. தினேஸ்குமார்,  கண்டி
நன்றி- தினகரன் வாரமஞ்சரி



தொழிலாளர் சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டும்

$
0
0
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு ஒரு பொறியாக மாறியிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.  
சென்ற முறை இந்தக் கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போது அரசாங்கத்தின் அமைச்சர்கள் தலையிட்டு இந்தச் சிக்கலைத் தோற்றுவித்திருப்பதாகவும் இதனால், கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் மேலும் ஈராண்டுகளுக்குத் தொடர்வதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு வழிவகுக்கப்பட்டிருப்பதாகவும் அருள்சாமி தினகரனுக்குத் தெரிவித்தார்.
1992ஆம் ஆண்டிலிருந்து கைச்சாத்திடப்படும் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள அனைத்துச் சரத்துகளும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பையும் தொழில் உத்தரவாதத்தையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளபோதிலும், கடந்த    2016ஆம் ஆண்டு ஒக்ேடாபரில் உடன்படிக்ைக கைச்சாத்திடப்பட்டபோது உடன்படிக்ைகயில் இரண்டாவது சரத்தாக, ஏதாவதொரு காரணங்களுக்காக உடன்படிக்ைக கைச்சாத்திடப்படுவது தாமதமாகும் பட்சத்தில், அதே உடன்படிக்ைக அமுலில் இருக்கும் என்ற விடயம் சேர்க்கப்பட்டுள்ளது. இது நிலுவைச் சம்பளம் பெறுவதையும் பேரம்பேசுதலையும் பலவீனப்படுத்தியிருப்பதாக அருள்சாமி சுட்டிக்காட்டினார்.  
ஆகவே, இம்முறை எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சங்கங்கள் அடிபணியாதென்றும் அவர் தெரிவித்தார். தொழிலாளர் நலனில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதற்குக் காங்கிரஸ் தயாராக உள்ளதென்றும் அவர் கூறினார்.  
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்க கம்பனிகள் மறுத்துவிட்டால், அதனைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கே உண்டென்று தெரிவித்த அருள்சாமி, இதற்காகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஆதரவையும் பெற்றுக்ெகாண்டு அடுத்த கட்ட நடவடிக்ைகக்குத் தயாராகவுள்ளதாகவும் கூறினார்.  
வெள்ளிக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையின் பெறுபேற்றைப்பொறுத்து வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின்போது, தொழிலாளர்களுக்கு 1200 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்குமாறு கம்பனிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டுமெனக் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  
தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதாக தலவாக்கலையில் நடைபெற்ற கூட்டமொன்றில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததைச் சுட்டிக்காட்டிய அருள்சாமி, இம்முறை ஆயிரம் ரூபாய் அதிகரிப்பை கம்பனிகளாக முன்வந்து வழங்கினால், ஏற்றுக்ெகாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாகவும் இல்லையேல் அரசாங்கத்தைக் கொண்டு 1200 ரூபாய் அதிகரிப்புக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.  
அவ்வாறு அரசாங்கம் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கம்பனிகளுக்கு உத்தரவிட்டாலும், கூட்டு ஒப்பந்தத்தில் சங்கங்கள் கைச்சாத்திட்டதன் பின்னரே அந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும். ஆகவே, கூட்டு ஒப்பந்தம் இருப்பது தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பானது என்று அருள்சாமி மேலும் குறிப்பிட்டார்.  
தொழிலாளர்களுகுத் தற்போது நாளொன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாய், விலைக்கேற்ற கொடுப்பனவு 30 ரூபாய், உற்பத்தி ஊக்குவிப்பாக 140 ரூபாய், 75 வீதம் பணிக்குச் சென்றால் 60 ரூபாய் என மொத்தம் 730 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 60 ரூபாயும் 140 ரூபாயும் வழங்காதிருப்பதற்காகத் தோட்ட நிர்வாகங்கள் நேர்மையற்ற விதத்தில் செயற்படுவதாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குறித்த இலக்கு வேலையைப் பூர்த்தி செய்தால் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்காதிருப்பதை நிர்வாகங்கள் உறுதிசெய்துகொள்ளும் அதேவேளை, மாதம் ஒன்றுக்கு 75 வீதம் வேலை வழங்காமல் தவிர்த்து 60 ரூபாயையும் தவிர்த்துவிடுவதில் நிர்வாகங்கள் சாமர்த்தியமாகச் செயற்படுவதாகத் தொழிலாளர்கள் குறைகூறுகிறார்கள். ஆக, 630 ரூபாய் மாத்திரமே நாட்சம்பளமாகக் கிடைக்கிறது.  
எனவேதான், இந்தக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து மொத்தமாக ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைக் கோரியிருப்பதாகத் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் சுட்டிக்காட்டினார். இந்தக் கோரக்ைகயை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம் கடந்த (17/08/2018) பேச்சுவார்த்தையில் ஐம்பது ரூபாய் அதிகரிப்பு வழங்குவதாகவும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மேலும் 25ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- தினகரன்

ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுத்தே தீருவேன்

$
0
0
கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனம் அடிப்படைச் சம்பளத்தை 100 ரூபாவாக உயர்த்த இணக்கம் தெரிவித்துள்ளப்போதிலும், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதில் இம்முறை உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள இ.தொ.காவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், நூறு ரூபாய் அதிகரிப்பைத் தாம் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.  
ராஜகிரியவில் நேற்று (15) நடைபெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான கலந்துரயைாடலின் பின்னர், அதில் கலந்து கொண்ட அனைத்துத் தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஆயிரம் ரூபாய் பெற்றுத் தருவதற்குத் தேவையான தொழிற்சங்க நடவடிக்கைகளையும் அரசாங்கத்தின் தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்” எனத் தெரிவித்தார்.  
சம்பள உயர்வு விடயத்தில் அழுத்தம் கொடுத்தால் மாத்திரமே, முதலாளிமார் சம்மேளனம் இறங்கி வருவார்கள் எனத் தெரிவித்த அவர், முதலாவது பேச்சுவார்த்தையில் 10 சதவீத அதிகரிப்பிலிருந்து தற்போது மூன்றாவது பேச்சுவார்த்தையின்போது 20 சதவீத அதிகரிப்புக்கு முதலாளிமார் சம்மேளனம் வந்திருக்கிறார்கள் என்றும் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பதுபோல தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் மாத்திரமே, ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற ந​ம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். 
இந்நிலையில்,கொழுந்து பறிக்கும் அளவுக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் எனும் கோரிக்கையையும் தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், எனினும் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். 
மேலதிக கொடுப்பனவுகள் எமக்கு வேண்டாம், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரமாக்கிவிட்டு பிறகு ஏனையவற்றைப் பேசிக் கொள்ளலாம். ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றோடு சேர்த்து, நாள்சம்பளத்தை 940 ரூபாயாக ​கம்பனிகள் கணக்குக் காட்டுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். 
ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார். இதன்போது அடுத்த  கட்டப் பேச்சுவார்த்தை எப்போது என வினவப்பட்டமைக்கு, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களோடு கலந்துரையாடித் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
இதன்போது கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்துகொள்ளப்பட வேண்டும் என்றோ, நிலுவைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றோ தேவைப்பாடுகள் இ.தொ.கவுக்கு இல்லை என நீங்கள் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறீர்களே என வினப்பட்டமைக்கு, நீதிமன்ற விடயத்தை நீதிமன்றில் பேசுவோம் என அக்கட்சியின் உப தலைவர் சட்டத்தரணி மாரிமுத்து பதிலளித்தார். 

இலங்கை தேயிலை குறித்து பிரசார நடவடிக்கை

$
0
0
இலங்கை தேயிலை குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை தேயிலை சபை தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், அடுத்த மாதம் ஆரம்பமாகும் பிரசார நடவடிக்கைகள் ரஷ்யாவிலும் அதனைத் தொடர்ந்து சீனாவிலும் நடைபெறும் என இலங்கை தேயிலை சபையின் தலைவர் லுசிலி விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக 350 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மலையகத்தில் மேலும் மண்சரிவு அபாயம்

$
0
0
நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை சில தினங்களுக்கு தொடரும் அதேநேரம் மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக நுவரெலியா, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை,கண்டி, மாத்தளை பகுதிகளில் தொடர்ந்தும் சுமார்100 முதல் 150 மில்லிமீற்றர் வரை கடும் மழை பெய்யுமென்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, மலையகத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் இயலுமானவரை அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இப்பிரதேசத்திற்கூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அவசர தேவைகளின் நிமித்தம் பிரதேச அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மத்திய , ஊவா, வடமத்திய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் 100 மில்லிமீற்றர் வரை கடும் மழை பெய்யுமென்றும் இக்காலப்பகுதியில் மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வயல்வெளிகள், மைதானங்கள்,குளங்கள், நீர் நிலைகள் போன்ற திறந்த வெளிகளில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மின்சார உபகரணங்களை கவனமாக கையாளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நன்றி- தினகரன்

வாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்!

$
0
0
மலையக மக்களின் பார்வையில் சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல; கானல் நீரும்கூட!
மலையக மக்களின் உரிமைகளுக்காக ஜே.வி.பி தொடர்ந்து வெளிப்படையாகவே குரல்கொடுத்து வந்திருக்கிறது. அதாவது இதயசுத்தியுடன், ஆனாலும் மலையகப் பிரதேசங்களில் ஜே.வி.பியை ஆதரிக்கும் தமிழர்கள் குறைவு. ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா அல்லது கம்யூனிசம், சமதர்மம் என்பதை இம்மக்கள் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்களா?
அருமையான கேள்வி! மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாம் மலையக மக்களின் உரிமைகளுக்காக மட்டுமல்ல, சலுகைகளையும் வழங்க மேண்டுமென குரல் கொடுப்பவர்கள். இருந்தபோதும் மலையக மக்கள் அரசியல் சார்ந்த தொழிற்சங்கங்களை தமது விருப்பத் தெரிவாக எப்போதும் வைத்துக் கொண்டுள்ளனர். அதன் பின்னணியில் இருந்தே அரசியலைத் தெரிவு செய்கின்றனர்.
தமக்கான அரசியல் தெரிவை, கட்சிகளின் கொள்கை அடிப்படையிலும் சமூகத்தை கட்டியெழுப்பும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டு அடிப்படையிலும் தூர நோக்குடனும் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, வெல்லப்போவது யார் என்று உன்னிப்பாக அவதானித்து அதன் பின் அணிதிரளும் சாமர்த்தியமும் உள்ளது. சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல, கானல் நீரும்கூட, அவர்களின் கருத்தியலில்!
தோட்டத் தொழிலாளியின் ஒருநாள் அடிப்படைச் சம்பளம் குறைந்தபட்சம் அரச ஊழியரின் ஒருநாள் சம்பளமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளீர்கள். ஆனால் 19 வருடங்களில் 399 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியிருக்கக்கூடிய கம்பனிகள் இதற்கெல்லாம் அசரும் என நினைக்கிறீர்களா?
கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கரிசனை காட்டுகிறார்களோ இல்லையோ, தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தை பெறும், கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கரிசனை காட்டுகிறார்களா என்பதுதானே முக்கியம்! ஆனால் அப்படி இல்லை என்பதுதான் முதல் பிரச்சினை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஆழமான கருத்தை முன்வைத்து இதயசுத்தியுடன் செயற்படுவதில்லை. அதுதான் உண்மையும் பிரதான காரணமும் ஆகும், பெருந்தோட்டத்தை தற்போது நிர்வகிக்கும் கம்பனிகள் அனைத்துமே பல்தேசிய கம்பனிகளாகும். அவை இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டிருப்பதால் சம்பளத்தை உயர்த்தி வழங்குவதில் பின்வாங்குகிறார்கள்.
கம்பனி எனும் கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி என்ற தொழிற்சங்கங்கள் இடம் கொடுக்காது. உதாரணத்திற்கு 1999 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு தொழிலாளியின் அடிப்படை நாட் சம்பளம் 2001 ஆம் ஆண்டு வரைக்கும் 101 ரூபாவாக இருந்தது. 2002 இல் புதிய கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது 121 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி இருவருட இடைவெளியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்க்கும்போது தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் எந்தளவுக்கு தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டுகின்றன என்பதை தோட்டத் தொழிலாளர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.
சம்பளப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சங்கத் தரப்பு, முதலாளிகளுக்கு பழகிப்போன தரப்பாகிப் போய்விட்டால் ஆணித்தரமாக பேசக்கூடிய நிலையில் அத்தரப்பு இல்லை என்றும் எனவே வேறு சங்கங்களும் சங்கத்தரப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறைந்தபட்சம் சங்கத் தரப்புக்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஆலோசனை சபை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உண்மையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுடன் ஏனைய தொழிற்சங்கங்களும் இணைந்து பங்குதாரர்களாக இருக்க வேண்டும், அப்போதுதான் பழைய தொழிற்சங்கங்கள் வளைந்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இல்லாவிட்டால் பழைய குருடி கதவை திறவடி என்ற கதைதான். அண்மையில் தனியார் வானொலியொன்றில் நடைபெற்ற கருத்தாடலின்போது என்னுடன் கலந்து கொண்ட தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர என்னிடம் நீங்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுங்கள் என்றார். 75 வீதம் என்ற வரையறை இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து தொழிற்சங்க தரப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும்கூட.
கம்பனிகளை பனங்காட்டு நரிகள் என்று வைத்துக்கொண்டால் தொழிலாளர் தரப்பு எப்படியிருக்க வேண்டும்?
கம்பனிகள் பணங்காட்டு நரிகளாயின் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் குள்ள நரிகள்தான்!
கூட்டு ஒப்பந்தம் என்பது சம்பள உயர்வை மட்டும் பேசும் ஒரு உடன்படிக்கையல்ல. ஆனால் சமீப காலமாக அப்படித்தான் அது பார்க்கப்பட்டு வருகிறது. நீங்கள் எப்படி இதனை அவதானிக்கிறீர்களா?
உண்மையில் சம்பள உயர்வுக்கு மேலதிகமாக தொழிலாளர்களின் நலன்புரி சேவை மற்றும் தொழிலாளர்களின் சலுகை போன்றவற்றில் தொழிற்சங்கங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டிய ஒன்றாக இருந்தபோதும் தற்போது 75 வீதமான தொழிலாளர்களின் நலன்புரி சேவைகள் வெட்டப்பட்டுள்ளதுடன், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பள உயர்வு என்ற கோட்பாடு மட்டும் பழக்கத்தில் உள்ளது.
இது முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். தற்போதைய பூகோளமய பொருளாதாரத்துக்குள் சிக்குண்டு இருக்கும் இலங்கை வாழ் தோட்ட மக்கள் பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சேவைக் கட்டண உயர்வு என்பவற்றால் ஏனைய சமூகத்தை விடவும் தோட்டத்து சமூகம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறது. அதற்கு தற்காலிக தீர்வாக வாழ்க்கைச் செலவுக்கேற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
உற்சாகம் பெற்றிருக்கும் மலையக வீடமைப்பு பற்றி...?
வீடுகள் வழங்குவதை பாராட்ட வேண்டும், இதில் உரித்து என்னும் உரிமையும் உள்ளடக்கப்பட வேண்டும். தற்போது ஏனைய சமூகத்துக்கும் வீடுகள் வழங்கும்போது ஏதாவதொரு காணி உரித்து பத்திரம் வழங்கப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த உரித்து பத்திரமும் வழங்கப்படுவதில்லை. வீடு வழங்குவது தொழிலாளர்களின் காதில் பூ வைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கக்கூடாது.
தற்போது வெளிவாரி முறை நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த வெளிவாரிமுறை தொடரும்போது கம்பனிகள் சம்பளம், விடுமுறை, சலுகைகள் என்பனவற்றை வழங்க வேண்டிய அவசியமே இல்லாது போய்விடும் அல்லவா? இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது என்றால், தொழிற்சங்க அரசியல் கட்டமைப்பும் இல்லாமல் போய்விடும், அப்படித்தானே?
இந்த முறையானது தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் ஒரு முறை. இம்முறையால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியையும், இழப்பையும் சந்திக்க நேரிடும். ஏன் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றையும் கூட. இதனால் தொழிற்சங்கங்கள் பாரிய பின்னடைவை அரசியல் ரீதியாக சந்திக்க நேரிடும்.
இம்முறை தொடர்பாக கம்பனிகளுடன் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அர்த்தபுஷ்டியான கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும். அதனுடன் அவர்களுக்கு வழங்கப்படும் காணி சம்பந்தமாக ஒரு உடன்படிக்கைக்கு வருவதோடு அதற்கான காலத்தையும் நிர்ணயிக்க வேண்டும். அது மட்டுமல்ல, முடிவில் அந்த காணிகளை தொழிலாளர்களுக்கே உரிமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்தோட்டக் குடியிருப்புகள் புதிய கிராமங்களாக மாறுவது பற்றி ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன?
வரவேற்கத்தக்கது. நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல் காணி உரித்துடன் அமையப்பெற வேண்டும். ஒப்பீட்டளவில் ஒரு குறுகிய காலப்பகுதியில் தமிழ் முற்போக்கு முன்னணி பெருந்தோட்ட சமூகத்துக்காக பல காரியங்களைச் செய்துள்ளது. எனினும் இ.தொ.கா.வின் செல்வாக்கு அப்படியேதான் இருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இரண்டையும் வெவ்வேறாக பார்ப்பதும் பிழையானதாகும். ஏனென்றால் மலையக தமிழ்த் தலைமைகள் ஆட்சி பீடத்திலிருக்கும் அரசாங்கத்தில் ஒரு காலையும் மலையகத் தலைமையில் மறு காலையும் வைத்துள்ளன. இதில் யாரும் விதிவிலக்கல்ல. குறிப்பாக 1994 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் ஆட்சியமைப்பதற்கு அமரர் பெ. சந்திரசேகரன் முட்டுக்கொடுத்தார். அதற்கு முன்னரும் மலையக அரசியல் முதலாளித்துவ அரசியல் தலைவர்கள் மகிந்தவின் அரசில் முற்போக்கு அணி, பிறபோக்கு அணி என அனைத்து தலைவர்களும் அனைவருமே அமைச்சர்கள். எனவே, இவர்களில் யார் மலையக மக்களுக்கு சேவை செய்தவர்கள் என்பதை விட எவர் கட்சி தாவாதவர்கள் என்பதே முக்கியமானது. உதாரணத்துக்கு கடந்த அரசில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், திகாம்பரம், போன்றோரை குறிப்பிடலாம்.
மலையக தமிழ் சமூகத்துக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
மலையக சமூகம் அரசியல் ரீதியில் அணித்திரள வேண்டும். இது வரைக்கும் இச்சமூகம் அரசியலை முன்னிறுத்தி அணிதிரளவில்லை. சந்தர்ப்பத்துக்கும், பழக்க தோசத்துக்காகவுமே அணிதிரண்டார்கள். அதனால் அனைத்து பக்கமும் தோல்வியுற்றவர்கள் தோட்ட தொழிலாளர்களே, அத்துடன் பொருளாதார ரீதியில் கவனம் செலுத்த வேண்டும். மாறிவரும் உலக பூகோளமய பொருளாதார முறைக்கு தாம் எவ்வாறு முகம் கொடுப்பது என்பதை யோசித்து நீதியான தேசம், நியாயமான சமூகத்தில் அடிமையில்லா மனிதனாக வாழ தம்மை தயார்ப்படுத்திக் கொள்வதோடு தேசிய அரசியல் நீரோட்டத்தில் தம்மை பங்காளியாக்கிக் கொள்ள வேண்டும்.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்
பேட்டி கண்டவர்- பி.வீரசிங்கம்
நன்றி- தினகரன் வாரமஞ்சரி
Viewing all 376 articles
Browse latest View live